எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: திருடன் கையில் சாவி.. குந்தவைக்காக தலையாட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: திருடன் கையில் சாவி.. குந்தவைக்காக தலையாட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: திருடன் கையில் சாவி.. குந்தவைக்காக தலையாட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 12, 2025 08:58 AM IST

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: நினைத்ததை செய்ய முடியாமல் தவித்து வந்த சக்திக்கு குந்தவையை பார்த்ததும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்ததால், குந்தவை எது சொன்னாலும் தலையை ஆட்டும் பொம்மை போல மாறிவிட்டான்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்:  திருடன் கையில் சாவி.. குந்தவைக்காக தலையாட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 12 எபிசோட்: திருடன் கையில் சாவி.. குந்தவைக்காக தலையாட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

விசாலாட்சியின் திட்டம்

இதற்கு ஏற்றார்போல, விசாலாட்சியும் பிள்ளைகள் எல்லாம் அம்மாவோட முந்தானையை பிடிச்சுட்டு வளர்ந்தவங்க. அவங்கள கைக்குள்ள போட்டுக்க நாம தான் திட்டம் போடனும். இந்த தர்ஷினி தான் தரிகெட்டு திரியுது. அவளோட சேர்ந்து மத்த பிள்ளைகளும் அம்மா பேச்சைக் கேட்டு கெட்டுப் போயிட கூடாதுன்னு சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில், நந்தினி அவருடைய குழந்தை தாராவுக்கு போன் போட்டு பேச முயன்ற போது, கதிர் உள்ளே புகுந்து கத்துகிறான். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி, என் பிள்ளைகிட்ட பேச எனக்கு உரிமை இருக்கு என கத்துகிறாள்.

கோவத்தில் கதிர்

அதே சமயத்தில் தன் பக்கம் திரும்பி நிற்கும் சக்தியை எக்காரணம் கொண்டும் மீண்டும் பெண்கள் பக்கம் விடக்கூடாது என நினைக்கும் குணசேகரன் சக்தியை சுற்றி திட்டம் தீட்டுகிறான்.

தர்ஷனுக்கான கல்யாண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்து தன் அண்ணனை வெளியில் எடுத்து வந்தது கதிர் தான் என்றாலும் இப்போது கல்யாண பொறுப்புகளை எல்லாம் கவனிக்குமாறு குணசேகரன் சக்தியிடம் சொல்வதை கேட்க கதிருக்கு கோவம் வருகிறது.

திருடன் கையில் சாவி

அப்போது தான், இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னா திருடன் கையிலயே சாவிய குடுக்கணும் என சொல்லி சக்தியிடம் வேலை கொடுத்ததற்கான காரணத்தை விளக்குகிறார். ஆனால், இங்கு சக்தியின் ரூட்டே வேற மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.

என்ட்ரி தந்த குந்தவை

கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்யக் கொடுத்த டெக்கர்ஸ் மேனஜரா சந்திக்க வந்த சக்திக்கு ஷாக் மேல் ஷாக் கிடைக்கிறது. அவர் பார்க்க வந்த மேனேஜர் தான் முன்னதாக சக்தி கல்யாணம் செய்துகொள்ள இருந்த குந்தவை. இவர், திருமண நாளன்று சக்தியை வேண்டாம் என சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டார். பின் இவர் அவருடைய அப்பாவுடன் சிங்கப்பூர் சென்றிருப்பார் என நினைத்த நினையில், அவர் அப்பாவுடன் செல்ல பிடிக்காமல் மதுரையிலே பிசினஸ் தொடங்கி இருக்கிறார்.

சக்திக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி

சக்தியை பார்தத உடனே, இவர்கள் இருவருக்கும் பழைய நியாபகங்கள் எல்லாம் வர சக்தி அப்படியே அமைதியாக குந்தவை பேசிக் கொண்டே இருக்கிறார். இது ஜனனியை பிரிந்து தனிமையில் இருக்கும் சக்திக்கு ஆதரவாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, சக்தி புதிய பிசினஸ் தொடங்க ஏன் ஜனனி ஊக்குவிக்கவில்லை என எதார்த்தமாக கேட்ட கேள்விகள் கூட சக்தியை தூண்டிவிட்டது போல மாறியது.

தலையாட்டும் பொம்மையான சக்தி

இவைதான் சக்தி மெல்ல மெல்ல குந்தவை மேலே சாஃப் கார்னராக மாறி, அவளைப் பற்றிய சிந்தனைகளும் அவளுடைய வளர்ச்சியும் சக்தியை ஈர்த்தது. இவ்வளவு பாசிட்டிவ்வாக சமீபத்தில் யாரும் சக்தியுடன் பேசாமல் இருப்பதால் குந்தவையின் பேச்சு சக்திக்கு புது தெம்பு கொடுத்தது. இதனால், சக்தி தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் மறந்து குந்தவையை மட்டும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறான்.

கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க வந்த சக்தி, குந்தவையை பார்த்து வியந்து, அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வருகிறான். அத்தோடு நீ என்ன சொன்னாலும் சம்மதம் தான் என டயலாக்கும் விடுகிறான். இதை எளல்லாம் பார்க்கும் போது சக்தி குந்தவை லவ் ட்ராக் வருமோ என்ற பதற்றத்தில் பார்வையாளர்கள் உள்ளனர். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.