எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கி இருக்கும் பெண்களிடம் ஒருவன் குடித்துவிட்டு தகராறு செய்கிறான். இதனால் பெண்கள் எல்லாம் பதற்றமாக இருக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: ஹோட்டல் கதவைத் தட்டும் பிரச்சனை.. வாயைப் பிளந்த சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டிற்குள் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தனர். இதற்கு இடையில், கோர்ட்டில் இருந்து ஆதி குணசேகரன் வீட்டிற்குள் வருவதற்கான ஆர்டர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி வீட்டில் உள்ள பெண்களிடம் மிகவும் ஓவராக பேசியதுடன், அவர்களை வீட்டை விட்டு வெளியே போகவும் சொன்னார்.
வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள்
இதையடுத்து, ஆதி குணசேகரனின் வீட்டில் இருந்து அடிமையாகி இருப்பதை விட வீட்டை விட்டு வெளியேறி தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.