எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: அடுத்தடுத்து ஆபத்தில் சிக்கித் தவிக்கும் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: நேற்று ஜனனி காலில் பூத்தொட்டி விழுந்த நிலையில், இன்று அவரது ரூமில் புகை மூட்டமாகி வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனை எதிர்த்து நிற்கும் பெண்களை ஏதாவது செய்ய வேண்டும் என ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறார். அவர் இந்த வீட்டில் ஜனனியை கட்டுக்குள் வைத்தால் அத்தனை விஷயமும் சரியாகிவிடும் என்பதில் உறுதியாக இருப்பதால் தன்னுடைய மொத்த கவனத்தையும் ஜனனி பக்கம் திருப்பியுள்ளார்.
பதறி அடித்த பெண்கள்
ஜனனி எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு அல்ல அவருடைய அறையை விட்டு கூட வெளியே வரக் கூடாது என்பதில் ஆதி குணசேரரன் மிக்க கவனமாக இருக்கிறார். இதையடுத்து, தன் போனை தேடிச் சென்ற ஜனனி திடீரென அலறி கத்திய சத்தம் கேட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் வெளியே பதறி அடித்து வந்தனர்,
மருத்துவமனையில் ஜனனி
அங்கு பார்த்தால், ஜனனி காலில் பூந்தொட்டி விழுந்து ரத்த வெள்ளத்தில் இருந்தார். வலி பொறுக்க முடியாத அவர், ஒரு கட்டத்தில் கதறி அழுது மயங்கி விட்டார். இதைப் பார்த்த பெண்கள் பதறி ஜனனியை காப்பாற்ற முன் வந்தனர், அந்த சமயம் பார்த்து சக்தி வீட்டிற்குள் வர அவன் விவரம் அறிந்து சக்தியை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான்.
எச்சரித்த குணசேகரன்
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனுக்கு இந்த வேலையை செய்தது ஆதி குணசேகரன் தான் என சந்தேகம் வந்தது. இதை அவரிடமே கேட்டும் விட்டான். ஆனால், அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே நடந்தது என்ன என்பதை கரிகாலன் புரிந்து கொள்கிறான். பின், கரிகாலனோடு சேர்ந்து ஜனனியை பார்க்க மருத்துவமனைக்கு வந்து பாசமாக பேசுவது போல ஜனனியை எச்சரித்துள்ளான்.
ட்விஸ்ட் வைத்த ஜனனி
அத்தோடு நில்லாமல், குந்தவையுடன் சக்தியை நெருக்கமாக வைக்கவும் திட்டம் தீட்டி சக்தி மருத்துவமனையில் இருக்கும் விஷயத்தை குந்தவையிடம் சொல்லி இருக்கிறான். இதைக் கேட்டு மருத்துவமனைக்கு வந்த குந்தவையை பார்த்து ஜனனி கடுப்பாவாள் என நினைத்த ஆதி குணசேகரனுக்கு ட்விஸ்ட் வைத்தாள் ஜனனி. குந்தவை வந்ததை விரும்பாத ஜனனி மருத்துவமனையில் இருந்து காருக்கு வரும் வரை தன்னை நீயே தூக்கிட்டு போ என சக்தியிடம் சொல்ல குந்தவைக்கு முகம் மாறியது.
ஜனனி உயிருக்கு ஆபத்து
பின் வீட்டிற்கு வந்த ஜனனி, பெண்களிடம் தனக்கு என் உயிருக்கு ஆபத்து இருப்பது போல உள் உணர்வு சொல்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை நினைத்து அவள் பயந்து கொண்டிருக்க, அவள் அறையில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவள் அறையைச் சுற்றிலும் புகை எழுகிறது. அவள் இதனால் மூச்சு முட்டி எழுந்த போதிலும் நடிக்க முடியாமல் சிரமப்பட்டாள்.
மயக்கத்தில் ஜனனி
அத்தோடு நில்லாமல் அவள் பயத்தில் எழுந்து அறையை விட்டு வெளியே வர நினைத்தாலும் அது முடியவில்லை. அவள் எக்கி எக்கி வெளியே வர முயன்ற போது அறைக்கு வெளியே தாழ்பாள் போட்டிருப்பது தெரிய வந்தது. வீட்டில் உள்ள அத்தனை பேரையும் அழைத்தும் பயனில்லை. இதனால் புகையை சுவாசித்து அவள் அப்படியே மயங்கி இருக்கிறாள்.

டாபிக்ஸ்