எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 17, 2025 12:54 PM IST

குணசேகரன் கதிரிடம் தர்ஷனை நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது; குறித்த நேரத்தில் இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!
எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 17 எபிசோட்: தடம் மாறிய தர்ஷன்.. கொதித்தெழுந்த குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று!

தொடர்ந்து குணசேகரன் கதிரிடம் தர்ஷனை நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது; குறித்த நேரத்தில் இந்த கல்யாணம் நடந்தே தீர வேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். இந்த நிலையில் உள்ளே வந்த ஈஸ்வரி கதிரிடம் உங்கள் எல்லோரையும் விட எனக்கு என் பிள்ளை மீது அதிக உரிமை இருக்கிறது, அக்கறை இருக்கிறது என்று சொல்ல, நந்தினி அடிக்கப்பாய்ந்தான் கதிர்.

நேற்று நடந்தது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் தர்ஷன் ஜனனி தரப்பிடம் நான் மேல்படிப்பு படிக்க வேண்டும். அன்புக்கரசி புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறாள். அதனால் அவள் எனக்கு சரியாக இருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன் என்றான். இதைக்கேட்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர்.

தொடர்ந்து சக்தி தர்ஷனிடம் எப்போது வந்து எதை சொல்கிறாய்; நீ என்ன சொல்கிறாய், என்ன பேசுகிறாய் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? இதை குணசேகரன் கேட்டால் என்ன நடக்கும் என்றெல்லாம் சொல்ல, ஈஸ்வரி சக்தியை சார்ந்தப்படுத்தி இந்த பிரச்சினையை சமூகமாக தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

இந்த விஷயத்தை தர்ஷன் குணசேகரனிடம் பயந்து பயந்து சொல்ல கோபமான அவர் அறிவுக்கரசியை வீட்டிற்கு வரச் சொன்னார். அறிவுக்கரசியிடம் இந்த விஷயத்தை தர்ஷன் சொல்ல, கொதித்தெழுந்த அறிவுக்கரசி கடைசி நேரத்தில் வந்து என்ன பேசுகிறாய்.. எங்கள் வீட்டிற்கு வந்து ஒட்டி உறவாடும் போது ஒன்றும் தெரியவில்லையா? என்று சாட, குணசேகரன் தர்ஷனை அடிக்கப்பாய்ந்தார்.