எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 11, 2025 01:36 PM IST

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: வீட்டு மருமகள்கள் எல்லாரையும் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வரவைத்ததற்கான காரணம் என்ன என்பதை தர்ஷினி புட்டு புட்டு வைத்தாள்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்

ஆதி குணசேகரனின் பிளான்

ஏற்கனவே, வீட்டை விட்டு வெளியே போன அனைவரையும் வீட்டுக்கு வரவைத்ததற்கான காரணம் என தெரிந்தும் பெண்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். இதைப் புரிந்துகொண்ட ஆதி குணசேகரன் தன் தம்பிகளை மனைவிகளோடு பாசமாக இருக்க வைத்து தன் திட்டத்தை நிறைவேற்ற ஆயத்தமானான்,

தர்ஷினியின் கோபம்

இந்நிலையில், வீட்டிற்கு வருவதற்கு முன் தெளிவாக தங்கள் வாழ்க்கையில் முடிவெடுத்த பெண்கள் எல்லாம் இப்போது ஏன் இந்த வீட்டில் பழையபடி அடிமையாகிவிட்டனர் எனத் தெரியாமல் தர்ஷினி துடித்துக் கொண்டிருந்தாள். இதில், தர்ஷினியின் அம்மா ஈஸ்வரி, ஆதி குணசேகரனுக்கு ஆதரவாக நின்றதும் அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகவே ஆனது.

பேச்சை கேட்காத பெண்கள்

இதனால், ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகிய 4 பேரையும் அழைத்து அவர்களிடம் பேசினாள். இங்கிருக்கும் ஆண்கள் உங்களை முன்னேறவே விடமாட்டார்கள் எனவும் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். ஆனால், அவள் கூறிய உண்மையை கேட்க யாருமே தயாராக இல்லை. அத்துடன், அவளை சமாதானம் செய்யவே நினைத்தனர்.

தர்ஷினிக்கு சமாதானம்

வீட்டை விட்டு வெளியே போனதற்கு பின் நாங்கள் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டோம். இதையும் வைத்து தான் பேசுகிறோம். நாங்கள் அப்படியே ஆதி குணசேகரன் சொல்வதை கேட்கப் போவதில்லை எனக் கூறியும் தர்ஷினி சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில், இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை எல்லாம் தர்ஷன் கேட்டுக் கொண்டிருக்க, ஈஸ்வரியை மூளை சலவை செய்வதற்காக, நான் உங்களிடம் தனியாக பேசவேண்டும் என தர்ஷன் கூப்பிடுகிறான். ஆனால், அதனை தர்ஷினி தடுத்தும் முடியவில்லை.

ஜனனிக்கு எதிரான திட்டம்

இதற்கு முன்னதாக, விசாலாட்சியை ஜனனி அக்கறையாக பார்த்துக்கொள்ள நினைக்க, அந்த சமயத்தில் விசாலாட்சிக்கு இப்படி ஆக காரணமே ஜனனி தான், அவரை நீங்கள் தனியாக விட்டுவிட்டு சென்றிருக்க கூடாது என சொல்ல, சக்திக்கு ஜனனி மீது கோபம் அதிகரித்தது. அதனால், அவளை அத்தனை பேர் முன் திட்டியதுடன், என் அம்மாவை பார்த்துக்க எங்களுக்கு தெரியும் என மிரட்டி அசிங்கப்படுத்தவும் செய்துள்ளான். இதனால் ஜனனி மனமுடைந்து போனாள்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.