எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: ஆதி குணசேகரனின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த தர்ஷினி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: வீட்டு மருமகள்கள் எல்லாரையும் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வரவைத்ததற்கான காரணம் என்ன என்பதை தர்ஷினி புட்டு புட்டு வைத்தாள்.

எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், வீட்டில் எல்லோரும் வீட்டு நன்மைக்காவும் ஆதி குணசேகரனின் நன்மைக்காகவும் யாகம் வளர்த்த வேண்டும் என ஜோசியர் கூறியதால் வீடே சலசலப்பாகிறது. பின், ஆதி குணசேகரன் வாசித்த சோக வாத்தியத்தைக் கேட்டு எல்லோரும் மனம் இறங்கிய நிலையில், அவருடன் தம்பதியாக அமர்ந்து யாகம் வளர்த்த ஈஸ்வரி ஒப்புக் கொண்டார். இதைக் கேட்டு வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் கோவம் தாங்கவில்லை.
ஆதி குணசேகரனின் பிளான்
ஏற்கனவே, வீட்டை விட்டு வெளியே போன அனைவரையும் வீட்டுக்கு வரவைத்ததற்கான காரணம் என தெரிந்தும் பெண்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். இதைப் புரிந்துகொண்ட ஆதி குணசேகரன் தன் தம்பிகளை மனைவிகளோடு பாசமாக இருக்க வைத்து தன் திட்டத்தை நிறைவேற்ற ஆயத்தமானான்,
தர்ஷினியின் கோபம்
இந்நிலையில், வீட்டிற்கு வருவதற்கு முன் தெளிவாக தங்கள் வாழ்க்கையில் முடிவெடுத்த பெண்கள் எல்லாம் இப்போது ஏன் இந்த வீட்டில் பழையபடி அடிமையாகிவிட்டனர் எனத் தெரியாமல் தர்ஷினி துடித்துக் கொண்டிருந்தாள். இதில், தர்ஷினியின் அம்மா ஈஸ்வரி, ஆதி குணசேகரனுக்கு ஆதரவாக நின்றதும் அவளுடைய கோபம் இன்னும் அதிகமாகவே ஆனது.
பேச்சை கேட்காத பெண்கள்
இதனால், ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகிய 4 பேரையும் அழைத்து அவர்களிடம் பேசினாள். இங்கிருக்கும் ஆண்கள் உங்களை முன்னேறவே விடமாட்டார்கள் எனவும் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். ஆனால், அவள் கூறிய உண்மையை கேட்க யாருமே தயாராக இல்லை. அத்துடன், அவளை சமாதானம் செய்யவே நினைத்தனர்.
தர்ஷினிக்கு சமாதானம்
வீட்டை விட்டு வெளியே போனதற்கு பின் நாங்கள் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டோம். இதையும் வைத்து தான் பேசுகிறோம். நாங்கள் அப்படியே ஆதி குணசேகரன் சொல்வதை கேட்கப் போவதில்லை எனக் கூறியும் தர்ஷினி சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. இதற்கிடையில், இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை எல்லாம் தர்ஷன் கேட்டுக் கொண்டிருக்க, ஈஸ்வரியை மூளை சலவை செய்வதற்காக, நான் உங்களிடம் தனியாக பேசவேண்டும் என தர்ஷன் கூப்பிடுகிறான். ஆனால், அதனை தர்ஷினி தடுத்தும் முடியவில்லை.
ஜனனிக்கு எதிரான திட்டம்
இதற்கு முன்னதாக, விசாலாட்சியை ஜனனி அக்கறையாக பார்த்துக்கொள்ள நினைக்க, அந்த சமயத்தில் விசாலாட்சிக்கு இப்படி ஆக காரணமே ஜனனி தான், அவரை நீங்கள் தனியாக விட்டுவிட்டு சென்றிருக்க கூடாது என சொல்ல, சக்திக்கு ஜனனி மீது கோபம் அதிகரித்தது. அதனால், அவளை அத்தனை பேர் முன் திட்டியதுடன், என் அம்மாவை பார்த்துக்க எங்களுக்கு தெரியும் என மிரட்டி அசிங்கப்படுத்தவும் செய்துள்ளான். இதனால் ஜனனி மனமுடைந்து போனாள்.

டாபிக்ஸ்