எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..

எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..

Malavica Natarajan HT Tamil
Published May 10, 2025 12:56 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மணிவிழாவில் ஆதி குணசேகரனோடு அமர முடியாது என ஈஸ்வரி சொன்ன நிலையில், கோபத்தில் ஆதி குணசேகரன் மாலையை கழட்டி தூக்கி வீசி எறிந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..
எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..

கடவுள் கொடுத்த வாய்ப்பு

இதை எல்லாம் புரிந்து கொண்ட ஜனனி, இந்த மணிவிழாவை நிறுத்த காரணம் தேடிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு தகுந்தாற்போல காரணமும் கிடைக்கிறது. கதிர்- நந்தினியின் மகள் தாரா மணிவிழா சமயத்தில் பூப்படைய அதை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்துகிறாள் ஜனனி. இது கடவுள் உங்களுக்காக கொடுத்த வாய்ப்பு. இதை தவற விடாதீங்க. இந்த கல்யாணத்த செய்ய வேண்டாம் என ஜனனி, ஈஸ்வரியை வற்புறுத்துகிறாள்.

வெளியேறிய ஐயர்

இதைக் கேட்ட கதிர், ஆத்திரத்தில் ஜனனியின் பிணத்தின் மீது தான் இந்த கல்யாணம் நடக்கும் என கத்தி கூச்சலிட, இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஐயர், தான் சாஸ்திரம் படி நடப்பவன், பணத்திற்காக எல்லாம் என்னால் இந்த வேலைகளை எல்லாம் செய்ய முடியாது. அதனால், தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

திட்டித் தீர்த்த ஜனனி

இதையடுத்து, விசாலாட்சி ஐயர் போனால் போகட்டும் இந்த வீட்டில் நான் தான் பெரியவள், என் ஆசிர்வாதம் இருந்தால் போதும் எனக் கூறி ஈஸ்வரியை வந்து ஆதி குணசேகரன் பக்கத்தில் உட்கார சொன்னாள். இதைக் கேட்டு கோவமான ஜனனி, அப்படி எல்லாம் உட்கார முடியாது. உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? மனுஷங்களையும் நம்புறது இல்ல. சாமயையும் நம்புறது இல்ல. எப்படி நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டார். அப்போது கதிர் ஜனனியை திட்டினான்.

மாலையை தூக்கிய எறிந்த குணசேகரன்

இதற்கிடையில் ஈஸ்வரி தனக்கு இந்த மணி விழா வேண்டாம் என்றும் தன்னால் இவருக்கு அருகில் உட்கார முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் மாலையை தூக்கி வீசிவிட்டு வெளியேறினான். அவனை சமாதானம் செய்ய அவரது தம்பிகள் எல்லாம் பின்னாலே சென்றனர்.

ஈஸ்வரியிடம் கோபப்பட்ட கதிர்

அங்கு குணசேகரன் தன் தம்பிகளோடு கண்ணீர்விட்டு பேசினான். இதற்கிடையில், நந்தினி, தாராவை சடங்கு செய்ய உட்கார வைத்திருந்தாள். அவள் என் பொன்னு நல்லா இருக்கணும்ன்னு நெனைக்குறது நீங்க. அவளுக்கு நீங்க தான் நலங்கு வைக்கனும் என சொல்ல, ஈஸ்வரி தயங்குகிறாள். பின், நந்தினி வற்புறுத்தியதால் ஈஸ்வரி நலங்கு வைக்க வந்த போது, கதிர் அங்கு வந்து ஈஸ்வரியை திட்டினான்.

என் அண்ணனே வேண்டாம் என்றால் எந்த உரிமையில் என் பொன்ன தொடுற. இன்னும் எதுக்காக இந்த வீட்ல நீ நிக்குற என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். அதே சமயத்தில், ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசிய நந்தினியையும் ரேணுகாவையும் கதிரும் ஞானமும் அடக்கி திட்டித் தீர்த்தனர்.