எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மாலையை தூக்கி எறிந்த ஆதி குணசேகரன்.. ஜனனியை அசிங்கப்படுத்திய கதிர்..
எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: மணிவிழாவில் ஆதி குணசேகரனோடு அமர முடியாது என ஈஸ்வரி சொன்ன நிலையில், கோபத்தில் ஆதி குணசேகரன் மாலையை கழட்டி தூக்கி வீசி எறிந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் மே 10 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், மணிவிழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடக்க, காணமல் போன ஈஸ்வரியையும் ஜனனியையும் கண்டுபிடித்து ஒருவழியாக சடங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர் குடும்பத்தினர். இந்த சடங்கின் மீது துளியும் விருப்பம் இல்லாமல், மகன் மேல் கொண்ட பாசத்திற்காக மறுப்பு சொல்ல முடியாமல் மனமும் ஒத்துவராமல் நின்று கொண்டிருக்கிறார் ஈஸ்வரி.
கடவுள் கொடுத்த வாய்ப்பு
இதை எல்லாம் புரிந்து கொண்ட ஜனனி, இந்த மணிவிழாவை நிறுத்த காரணம் தேடிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு தகுந்தாற்போல காரணமும் கிடைக்கிறது. கதிர்- நந்தினியின் மகள் தாரா மணிவிழா சமயத்தில் பூப்படைய அதை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்துகிறாள் ஜனனி. இது கடவுள் உங்களுக்காக கொடுத்த வாய்ப்பு. இதை தவற விடாதீங்க. இந்த கல்யாணத்த செய்ய வேண்டாம் என ஜனனி, ஈஸ்வரியை வற்புறுத்துகிறாள்.