அதே டெய்லர், அதே வாடகை.. நிலாவாக மாறிய எதிர்நீச்சல் ஜனனி - விஜய் டிவியின் புதிய சீரியலில் மதுமிதா சொன்ன முக்கிய விஷயம்
எதிர்நீச்சலில் இருந்து விலகிய மதுமிதா விஜய் டிவியில் நடித்து வரும் புதிய சீரியலில் அவரது லுக் மற்றும் கதாபாத்திரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் விலகியது குறித்த அப்டேட்டும் மதுமிதா சொல்லியுள்ளார்.
சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்ட டிவி சீரியல்களில் முக்கியமான சீரியலாக சன்டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் இருந்து வந்தது. இந்த சீரயலின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இதையடுத்து இந்த சீரியலின் முதல் பாகத்தில் பிரதான கதாபாத்திரமான ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த கேரக்டரில் தற்போது பார்வதி வெங்கட்ராமன் என்பவர் நடித்து வருகிறார்.
விஜய் டிவி சீரியலில் மதுமிதா
எதிர்நீச்சல் சீரியல் மூலம் எதிர்நீச்சல் மதுமிதா பெயரெடுத்த இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். மதுமிதா நடிக்கும் புதிய சீரியலுக்கு அய்யனார் துணை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மதுமிதாவின் கதாபாத்திரம் நிலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், புரொமோ இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. எதிர்நீச்சல் சீரியல் போல் அய்யனார் துணை சீரியலிலும் மதுமிதா ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகல் ஏன்?
அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய மதுமிதாவிடம் ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியது ஏன் என கேட்டுள்ளார். அதற்கு, இதுகுறித்து மற்றொரு இன்ஸ்டா லைவில் கூறுகிறேன் என பதில் அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் மதுமிதாவின் பதிலை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை மதுமிதா அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பதிவில், "புதிய அத்தியாயத்தில் நான் காலடி எடுத்து வைக்கப்போகிறேன். 'எதிர் நீச்சல்' சீரியலின் 2வது பாகத்தில் நான் நடிக்கப்போவதில்லை. பல்வேறு காரணங்களால் அதிலிருந்து நான் விலகுகிறேன். இதுவரை எனக்கு அன்பும், ஆதரவும் அளித்துவந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மதுமிதா கன்னடத்தில் சில சீரியல்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்தன் மூலம் பிரலமானார். அதன் பின்னர் தான் தமிழில் எதிர்நீச்சல் சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற மதுமிதா, எதிர்நீச்சல் ஜனனி என்ற அழைக்கப்பட்டார். இவர் இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் இல்லாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
கோலங்கள் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் சன்டிவியில் கடந்த 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான தொடர் எதிர்நீச்சல். ஆண் ஆதிக்கம் மிக்க கணவரிடம் மனைவி தனக்கான உரிமையை எப்படி மீட்டெடுக்கிறாள் என்கிற கதையம்சத்தை கொண்டிருக்கும் இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தது. பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் திடீரென முடிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்த சில வாரங்களிலேயே எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பிடித்த நடிகர்கள் மதுமிதா தவிர பெரும்பாலோனோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள்.