எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: மணி விழாவிற்கு ஆப்பு வைத்த ஜனனி.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஈஸ்வரியின் கையில் முடிவு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: மணி விழாவிற்கு ஆப்பு வைத்த ஜனனி.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஈஸ்வரியின் கையில் முடிவு!

எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: மணி விழாவிற்கு ஆப்பு வைத்த ஜனனி.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஈஸ்வரியின் கையில் முடிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 09, 2025 12:28 PM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: தொடர்ந்து ஈஸ்வரி கல்யாணத்திற்கு ரெடியாக, தாராவின் மூலமாக கல்யாணத்தை நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில், ஜனனி அதை முன் வைத்து இந்த கல்யாணம் நடக்காது என்று கூறினாள்.

எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: மணி விழாவிற்கு ஆப்பு வைத்த ஜனனி.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஈஸ்வரியின் கையில் முடிவு!
எதிர்நீச்சல் சீரியல் மே 9 எபிசோட்: மணி விழாவிற்கு ஆப்பு வைத்த ஜனனி.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஈஸ்வரியின் கையில் முடிவு!

தொடர்ந்து ஈஸ்வரி கல்யாணத்திற்கு ரெடியாக, தாராவின் மூலமாக கல்யாணத்தை நிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில், ஜனனி அதை முன் வைத்து இந்த கல்யாணம் நடக்காது என்று கூறினாள். இதைக்கேட்டு எல்லோரும் அவளைச் சாட, இந்த விஷயத்தில் ஈஸ்வரி முடிவெடுக்கட்டும் என்று கூறி, முடிவை அவர் கையில் குடும்பத்தினர் விடுகிறார்கள். அவர் என்ன சொல்கிறார் என்பது இன்றைய தினம் எபிசோடில் தெரியும்.

நேற்று நடந்தது என்ன?

நேற்றைய தினம் எதிர்நீச்சல் சீரியல் எபிசோடில் மணிவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. விழாவில் நந்தினி தொடர்ந்து வாய் பேசிக் கொண்டிருக்க, பிரச்சினைகள் அதனால் மூண்டு கொண்டே இருந்தன.

கூடவே ரேணுகாவும் சேர்ந்த நிலையில், வாக்குவாதம் முற்றிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் இரு குடும்பத்தாருக்கும் இடையே வெடித்தது. இதையடுத்து குணசேகரன் அனைவரையும் சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்குமாறு கூறினார்.

தொடர்ந்து ஐய்யர் தாலியைக் கேட்க, குணசேகரன் தங்கத்தில் வாங்கிய தாலியை ஜான்சி ராணி காண்பித்து பெருமிதமாக பேசினாள். இதையடுத்து ஜனனியை ஈஸ்வரியை சென்று அழைத்து வருமாறு மாமியார் கூற, அங்கே போன ஜனனி நெடுநேரமாகியும் வரவில்லை.

இந்த நிலையில் அவர்கள் இருந்த ரூமை மறுபடி மறுபடி தேடிப் பார்த்த போது அவர்கள் வீட்டில் இல்லை என்று கதிர் தரப்பு முடிவு செய்து விட்டது. வீட்டில் ஒரே வாசல் இருக்கும் பொழுது அவர்கள் எப்படி தப்பித்திருக்க முடியும் என்று கேட்க, அவர்கள் தப்பிக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று கதிர் கூறினான்.

தொடர்ந்து அவர்கள் ஜன்னல் வழியாக இறங்கி தப்பித்து இருக்கிறார்களா என்று பார்த்தபோது அங்கேயும் எதுவும் இல்லாததால் அவர்கள் எப்படி தப்பினார்கள் என்று குடும்பத்தினர் குழப்பதில் இருந்தனர்.