எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 11:02 AM IST

எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: மணிவிழாவிற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் ஈஸ்வரி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: ஊரே கூடி நின்றபோது கம்பி நீட்டி காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியல்

ஈஸ்வரியின் அப்பாவை அசிங்கப்படுத்தும் ஜான்சி

அந்த சமயத்தில் ஈஸ்வரியின் அப்பா மணி விழாவிற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது, அவர் கட்டைப் பைகளை மட்டும் எடுத்து வந்ததை பார்த்து கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி அசிங்கப்படுத்தினாள். மகளின் மணிவிழாவிற்கு வரும் போது ஊரே திரண்டு சீர் செய்வாங்க. இங்க என்னடான்னா வெறும் கட்டப்பைய தூக்கிட்டு வந்திருக்கீங்க என அசிங்கப்படுத்தினாள்.

சீர் வரிசை தயார் செய்த மாமனார்

இதைக் கேட்ட ஆதி குணசேகரன் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாலும் வெளியே ஜான்சி ராணியை அமைதியாக இருக்கச் சொன்னான். அத்தோடு நான் அவரை சீர் எதிர்பார்த்து எல்லாம் வர சொல்லல. எனக்கு அவரோட ஆசிர்வாதம் தான் முக்கியம் என பேசி உருகினார். இதைக் கேட்டு விசாலாட்சி தன் மகளை பெருமையாக பேசினாள். அதைக் கேட்ட ஈஸ்வரியின் அப்பா, இந்த கட்டப்பை இப்போதைக்கு தேவையானது.

என் மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் தேவையானதை செய்வதற்கான ஏற்பாட்டை செய்துவிட்டு தான் வந்துள்ளதாக கூறினார். பின், தான் வாங்கி வந்த புது துணிகளை தன் பேரனுக்கும் பேத்திக்கும் போட்டு அழகு பார்க்க நினைத்தார். அதை தர்ஷன் ஏற்றுக் கொண்டாளும் தர்ஷினி ஏற்றுக் கொள்ளவில்லை. அவளை ஈஸ்வரியின் அப்பா சமாதனம் செய்து வந்தார்.

கர்ப்பமான ஜனனியின் தங்கை

அடுத்ததாக, ஜனனியின் அப்பா மணிவிழாவிற்கு வந்தபோதும் ஜான்சி ராணி அவரையும் அசிங்கப்படுத்தினாள். மணிவிழாவிற்கு எல்லாரும் குடும்பத்தோடு வந்து ஆசிர்வாதம் செய்வாங்க. இங்க என்னடான்னா ஒத்தையில வந்து நிக்குறீங்க என சபை முன் கேவலப்படுத்தினார். அப்போது குடும்பத்தோடு வர தான் கிளம்பினோம். அப்போது தான் என்னுடைய சின்னப் பொன்னு மாசமா இருக்கா. அது அப்போ தான் தெரிஞ்சதால அவங்களால வர முடியல என்றார்.

ஜனனியை அசிங்கப்படுத்திய விசாலாட்சி

இதைக் கேட்ட விசாலாட்சி, கேக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு. இங்கயும் தான் இருக்க உங்க பெரிய பொன்னு. அவளும் வாழாம மத்தவங்களையும் வாழ விடாம பண்ணிட்டு இருக்கா. வீட்டுல சின்னதுங்க எல்லாம் உண்டாகுதுங்க. ஆனா இவ எப்போ நல்ல சேதி சொல்லப் போறாளோ தெரியலன்னு குத்திக்காட்டி பேசினாள். இதைக் கேட்ட ஜனனியின் முகமே மாறிய நிலையில் விசாலாட்சியை அமைதியாக இருக்கச் சொன்னான்.

காணாமல் போன ஈஸ்வரி

பின் நானும் ஜனனியும் இப்போ நல்லா ராசி ஆகிட்டோம். எங்களுக்குள்ள இப்போ எல்லாம் சகஜமா தான் போயிட்டு இருக்குன்னு சொன்ன ஆதி குணசேகரன், ஜனனியிடம் அப்பாலிற்கு ஸ்வீட் கொடுக்க சொன்னான். அப்போது, ஜனனியின் அப்பா நான் மாப்பிள்ளைக்காக தான் வந்தேன். அதெல்லாம் எதுவும் தேவையில்லை என சொல்லி அலரும் ஜனனியை நிராகரித்தார்.

பின் எல்லாரும் மணிவிழாவிற்கு ரெடியான ஈஸ்வரியை அழைத்து வர சென்ற போது, அவளும் ஜனனியும் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதைக் கேட்ட கதிர், ஞானம், சக்தி ஆகியோர் ஈஸ்வரியை தேட ஆரம்பித்தனர். பின் இதற்கெல்லாம் காரணம் ஜனனி தான் எனவும் அவள் கிடைத்தாள் சும்மா விடமாட்டேன் என்றும் கத்திவிட்டு ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.