என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jan 02, 2025 11:58 AM IST

ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் சூப்பர் சிங்கர் வென்ற பரிசுக்கு இன்னும் தனது கைக்கு கிடைக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளரான அருணா.

என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
என்ன கொடுமை சார்! ரூ. 60 லட்சம் பரிசுக்கு ரூ. 15 லட்சம் வரி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பரிசு கிடைக்கவில்லை

கடந்த 2022 நவம்பர் முதல் 2023 ஜூன் வரை சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக அருணா ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 60 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்க பணமும் அளிக்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் சீசன்களில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற அருணாவுக்கு, பரிசாக அளிக்கப்பட்ட வீடு இன்னும் வந்து சேரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக அந்த வீட்டை அவர் பெற வேண்டுமானாலும் செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கி இருப்பதே காரணம் என தெரியவந்துள்ளது.

ஒரு வருடம் டைம்

அருணாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கு வரியாக ரூ. 15 லட்சம் கட்ட வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் முழு தொகையை அவர் இன்னும் முழுமையாக செலுத்ததாக நிலையில் வீட்டில் குடியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அருணா கூறும்போது, "பரிசாக அளிக்கப்பட்ட வீட்டுக்கு லட்சக்கணகக்கில் வரி கட்ட வேண்டும். இதுவரை நாங்கள் கட்டவில்லை. குடும்ப சூழல் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக வரி பணத்தை கட்டி வருகிறோம்.

இதற்காக நாங்க டைம் கேட்டிருக்கிறோம். கூடிய விரைவில் முழு பணமும் கட்டி குடிபெயர்ந்துவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

உடனடியாக பரிசு கிடைக்க வேண்டும்

ஆறு மாதமாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று ஒன்னரை வருடங்கள் ஆன பிறகும், நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட பரிசு வெற்றியாளரை போய் சேராமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

சூப்பர் சிங்கர் அருணாவின் பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ள பலரும் ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் உடனடியாக கிடைக்கும் விதமாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் விதமாக இருக்ககூடாது எனவும் கூறி வருகிறார்கள். 

அத்துடன் ரூ. 60 லட்சம் பரிசுக்கு இவ்வளவு வரி திக்குமுக்காட செய்வதாகவும் கூறியுள்ளனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 10

கடைசியாக சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி 2023 டிசம்பரில் தொடங்கி, 2024 ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதன் டைட்டில் வின்னராக ஜான் ஜெரோம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சூப்பர் சிங்கர் 11 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகமல் உள்ளது.

இதற்கிடையே விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 6 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ரவுண்டுகளில் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்த வாரத்துக்கான நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களுக்கு பக்தி திருவிழா என்ற பெயரில் பக்தி பாடல்கள் ரவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புரொமோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.