Saritha interview: "சரத்குமார் படத்தால் வந்த வினை.. ரஜினி படம்னு சொல்லியும்... பாட்ஷா படத்துல நொந்துட்டேன்" - சரிதா!
Saritha interview: சினிமாவில் நேரம் என்பது மிக மிக முக்கியமாகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, சினிமாவில் நாம் கொடி கட்டி பறக்கலாம்; அதன் பின்னர், அந்த நேரம் மாறுவதற்கு ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு இடையூறு வரும். - சரிதா!

டப்பிங் கலைஞரான சரிதா ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் பற்றி நாதஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
சுரேஷ் கிருஷ்ணா விடுத்த அழைப்பு
அந்த பேட்டியில் அவர் பேசும் போது,"வீரா, வேடன் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் எல்லா திரைப்படங்களிலும், நான் டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வந்தேன். இதனையடுத்து, அவர் இயக்கிய பாட்ஷா திரைப்படத்திலும், நடிகை நக்மாவுக்கு டப்பிங் பேச என்னை அழைத்து இருந்தார். அது தொடர்பான வேலைகள் அனைத்தும், சென்னை பிரசாத்
ஸ்டியோவில் நடந்து கொண்டிருந்தது. இதனையடுத்து, அவர்கள் என்னை வாய்ஸ் டெஸ்டக்காக அழைத்து இருந்தார்கள்.
அப்போது, நான் ஏவிஎம் ஸ்டியோவில் சரத்குமார் படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டு இருந்தேன். சரி, வாய்ஸ் டெஸ்ட் தானே சீக்கிரம் முடிந்து விடும் என்று சொல்லி, அங்கு கிடைத்த பிரேக்கில், இங்கு வந்து சுரேஷ் கிருஷ்ணா சாரிடம் வாய்ஸ் டெஸ்ட் கொடுத்தேன். என்னுடைய வாய்சை கேட்ட பாட்ஷா படத்தின் மொத்த படக்குழுவினருக்கு வாய்ஸ் பிடித்து விட்டது. அது ஒரு இரண்டாவது சனிக்கிழமை. அன்று அவர்களுக்கு பிரசாத் ஸ்டூடியோ விதித்த காலக்கெடு வேறு முடிகிறது. கூடவே, படத்தில் வரும் இஸ்லாமிய காட்சிகளின் பின்னணி குரலுக்காக அங்கு ஏராளமானோர் கூடி இருந்தனர். அவர்கள் அவரச அவரசமாக எல்லா பணிகளையும் செய்து கொண்டு இருந்தார்கள்.
காரணம் அவர்களை சீக்கிரம் பணி முடித்து அனுப்ப வேண்டும். ஆகையால், பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது.
பெரிய வாய்ப்பு என்று பார்த்தேன்.
பாட்ஷா திரைப்படம் பெரிய படம், வாய்ப்பும் பெரியது என்பதால், நானும் டப்பிங்கை தொடங்கி விட்டேன். அந்த படத்தில் வரும் அழகு பாடல் வரை, நான் டப்பிங் பேசி விட்டேன். அப்போதுதான் அந்த கசப்பான சம்பவம் நடந்தது.
சினிமாவில் நேரம் என்பது மிக மிக முக்கியமாகும். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, சினிமாவில் நாம் கொடி கட்டி பறக்கலாம்; அதன் பின்னர், அந்த நேரம் மாறுவதற்கு ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு இடையூறு வரும். அந்த இடையூறின் வாயிலாக, உச்சத்தில் இருப்பவர்கள் பொத்தென்று கீழே விழுவார்கள். அதே மாதிரியான ஒரு சம்பவம் தான் அன்று நடந்தது.
கண்ட படி திட்டிய மேனஜர்
சரத்குமார் படத்தின் புரொடக்ஷன் மேனஜர் வேகமாக பிரசாத் ஸ்டியோ விற்குள் வந்தார். வேகமாக உள்ளே வந்தவர், என்னை கன்னா, பின்னாவென்று திட்ட ஆரம்பித்து விட்டார். அங்கு உனக்காக தியேட்டரும், ஆர்டிஸ்ட்டும் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, நீ இங்கே வந்து, இந்த படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறாயா என்று கடுமையாகச் சாடினார். இதையடுத்து பாட்ஷா பட தரப்பிலிருந்து, அந்த மேனேஜரிடம் எவ்வளவோ எடுத்து பேசி,சமாளிக்க முயன்றார்கள்.
இந்த படம் கொஞ்சம் பெரிய படம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம், கொஞ்சம் உதவும் மாறும் கெஞ்சிநா ஆனால் அவர் கேட்கவே இல்லை. இந்த விஷயம் நக்மா காதுகளுக்கு சென்றது. நக்மாவிற்கு நான் காதலன் திரைப்படத்தில் டப்பிங் பேசி இருந்தேன். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த அதிர்ஷ்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, சரிதான் இந்த படத்திற்கும் எனக்கான பின்னணி குரல் கொடுக்க வேண்டும். அதற்காக, அவருக்கான சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வேண்டுமென்றாலும் நான் கொடுக்கிறேன் என்றும் சொன்னார். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் நக்மா மீது கோபப்பட்டு, படம் என்னுடையது, யாரை டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக போட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று சொல்லிவிட்டார். இதனால் வேறு வழியே இல்லாமல் நான் பாட்ஷா படத்தை தவிர்த்துவிட்டு சரத்குமார் படத்தில் பணியாற்ற சென்று விட்டேன்." என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்