ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி

ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 03, 2025 02:34 PM IST

ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன் என்று பேசிய நாடக நடிகை தாமரையின் பேட்டியைக் காணலாம்.

ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி
ரூ.20 இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன்.. அவர் ஜவுளிக்கடையில் இருந்தார், நான் நாடகத்துக்குப் போயிடுவேன்.. தாமரை பேட்டி

இதுதொடர்பாக முதலில் பேசிய பார்த்தசாரதி, ’’முதல்முறை ஒரு திருவிழாவில் தான் தாமரையைப் பார்த்தேன். புடவை ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லிட்டு நடந்து போய்க்கிட்டு இருந்தேன்.

அவங்க பிரச்னையில் இருந்தாங்க. அப்போது அவங்களை மீட்டு அவங்க வீட்டில் விட்டாச்சு. அதன்பின் தான் தாமரைமேல் காதல் உருவானது. ஒரு வருஷம் வரை, அவங்க ஒத்துக்கல. முதலில் அவங்க கிட்ட நேரடியாக, அதைச் சொல்லல. யாராவது ஆதரவற்ற பெண்கள் இருக்காங்களான்னு பேசி, கொஞ்சம் கொஞ்சமாக அவங்க வீட்டில் குளோஸ் ஆகி அதன்பின் தான் திருமணம் செஞ்சுகிட்டோம்’’ எனச் சொல்லி முடித்தார், தாமரைச்செல்வியின் கணவர் பார்த்தசாரதி

ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன் - சீரியல் நடிகை தாமரை

அதன்பின் தொடர்ந்த தாமரைச் செல்வி என்கிற தாமரை, ‘’ சுத்தியிருக்கிறவங்க ஆயிரம் கமெண்ட் செய்தாங்க. அவங்க அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அப்படி தான் போயிடுவாங்க. அவங்க மனசாட்சிக்குத் தான் தெரியும். ரொம்ப சின்ன வயசு. ரொம்ப பயந்துக்கிட்டே இருந்து இருக்கேன். நாடகத்துக்குப் போகும்போது தைரியம் வந்திடுச்சு. யார் பேசினாலும் கண்டுக்கல. இவர் சுத்தும்போது கண்டுக்கவே இல்ல. பிறகு, பாவம்ன்னு ஒத்துக்கிட்டேன்.

எதுவுமே வேண்டாம். அம்மா கூட இருந்திட்டு பிள்ளையைக் காப்பாத்திட்டு இருந்திரலாம்ன்னு தான் நினைச்சேன். பார்த்துதான் என்ன கல்யாணம் பண்ணுவார்னு நினைச்சு கூட பார்க்கல. அதன்பின்னு ரொம்ப பயந்துக்கிட்டே தான் இருந்தேன். இதுவரை சண்டை போட்டதே கிடையாது. பசங்க மேல் இருக்குற கோபத்தைப் போக்க வைச்சிட்டார். ரொம்ப சப்போர்ட்டாக இருப்பார். குழந்தையே பெத்துக்கமாட்டேன்னு இருந்தேன். ஆனால், என் முதல் பையனையும் நல்லா பார்த்துக்கிட்டார். சும்மா ஒரு வீட்டுக்குள்ள தான் கல்யாணம் நடந்துச்சு. விஜய் டிவி தான், மிஸ்டர் அண்ட் மிஸஸில் தான், ஒரு உண்மையான கல்யாணம் நடந்தமாதிரி. அங்கு பத்திரிகை எல்லாம் அடிச்சு கொடுத்தபிறகு, ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

பிக்பாஸுக்கு முன்னாடி வரைக்கும் எங்களுக்குள் சந்தோஷமே இருந்தது கிடையாது. நான் வீட்டிலேயே இருக்கமாட்டேன். இவர், ஜவுளிக்கடைக்குப் போயிடுவார். நான் நாடகத்துக்குப் போயிட்டு, காலையில் 11 மணிக்கு வருவேன். இவர் காலையில் 8 மணிக்கு எல்லாம் வீட்டை விட்டுப் போயிடுவார். திரும்ப இவர் நைட் 10 மணிக்கு வருவார். நான் காலையில் 4 மணிக்கு எல்லாம் வீட்டை விட்டுப் போயிடுவேன். நாங்க இரண்டு பேருமே சந்திச்சுகிட்டதே கிடையாது.

20 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கோம்: தாமரை

டைரியில் டேட் எல்லாம் போட்டு, எந்த ஊர், எந்த நாடகம்னு எல்லாம் எழுதிவைச்சிருப்பேன். இவர் அதைப் பார்த்திட்டு, கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கமுடியலைன்னு, சும்மா நாடகம் இருக்குன்னு எழுதிவைச்சிடுவார். அப்படி ஏமாத்துவார்.

என் முதல் பையனும் இவரும் தான் ரொம்ப அட்டாச்மென்ட்டாக இருப்பாங்க. நான் கர்ப்பமாக இருக்கும்போது மயங்கி விழுந்திடுவேன். அப்போது எல்லாம் ஒரு ரூபாய் காயின் போன் தான். அவர் நம்பருக்கு ஒரு ரூபாய் காயின்போனில் பேசி தகவல் சொல்வான், பெரியவன். இவர் வந்து பார்ப்பார்.

பெரியவனும் என் மாமியாருமே ரொம்ப க்ளோஸ். அவ்வா, நல்லவங்கம்மா சொர்க்கத்துக்குத்தான் போவாங்கன்னு சொல்வான், பெரியவன்.

நாங்க 20 ரூபாய் காசில்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன். நான் மாசமாக இருக்கும்போது,எனக்கு உடம்பு முடியாமல்போயிடும். இவரும் வேலைக்குப் போகமாட்டார். ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றவங்க தான், 20 ரூபாய் கொடுத்து சாப்பாடு வாங்கிக்கொடுத்தாங்க’’எனச் சொல்லி முடித்தார், தாமரை.

நன்றி: கலாட்டா தமிழ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.