3 சூப்பர் ஹீரோவை வைத்து எடுத்த ஹை பட்ஜெட் படம் எடுத்து திவாலான புரொடியூசர்.. அடக் கொடுமையே..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  3 சூப்பர் ஹீரோவை வைத்து எடுத்த ஹை பட்ஜெட் படம் எடுத்து திவாலான புரொடியூசர்.. அடக் கொடுமையே..

3 சூப்பர் ஹீரோவை வைத்து எடுத்த ஹை பட்ஜெட் படம் எடுத்து திவாலான புரொடியூசர்.. அடக் கொடுமையே..

Malavica Natarajan HT Tamil
Published Apr 11, 2025 07:29 PM IST

ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஜூஹி என தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக இருந்த 3 பேர் சேர்ந்து ஹை பட்ஜெட்டில் உருவாக்கிய ஒரு பான் இந்தியா படத்தின் மொத்த வசூலே 8 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை தான். இதோ படத்தின் விவரம்.

3 சூப்பர் ஹீரோவை வைத்து எடுத்த ஹை பட்ஜெட் படம் எடுத்து திவாலான புரொடியூசர்.. அடக் கொடுமையே..
3 சூப்பர் ஹீரோவை வைத்து எடுத்த ஹை பட்ஜெட் படம் எடுத்து திவாலான புரொடியூசர்.. அடக் கொடுமையே..

இயக்குநரின் ஆசை

1988 ஆம் ஆண்டில், கன்னட நடிகரும் திரைப்பட இயக்குனருமான வி. ரவிச்சந்திரன் ஒரு பெரிய திட்டத்தை தீட்டினார். அவர் அனைத்து மொழி மற்றும் பார்வையாளர்களுக்காக ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என நினைத்தார். அதனால் அவர், சாந்தி கிராந்தி என்ற தலைப்பில், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை தயாரித்தார்.

அட்டர் பிளாப்

இந்தப் படத்திற்காக ரவிச்சந்திரன் இந்த படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி இருந்தார். கன்னட பதிப்பில் அவரே முன்னணி வேடத்தில் நடித்தார். தெலுங்கு பதிப்பில் நாகார்ஜுனா நடித்தார். ரஜினிகாந்த் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் முன்னணி வேடத்தில் நடித்தார். ஜூஹி சாவ்லா, குஷ்பு மற்றும் அனந்த் நாக் போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்த படம் ரூ. 10 கோடி மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இது அந்தக் காலத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்திய படம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சாந்தி கிராந்தி திரைப்படம் அஜூபா படத்தின் ரூ.8 கோடி பட்ஜெட்டை முறியடித்தது.

3 சூப்பர் ஸ்டார் இருந்தும் பிளாப்

சாந்தி கிராந்தி படம் செப்டம்பர் 1991 ஆம் ஆண்டு கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டது. மற்ற இரண்டு பதிப்புகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரைக்கு வந்தன. ஆனால், இது ஒரு மிகப்பெரிய ஃபிளாப் படமாக அமைந்தது. ரஜினி, நாகார்ஜுனா மற்றும் ஜூஹி போன்ற மூன்று பெரிய நட்சத்திரங்கள் இருந்தபோதிலும், இந்த படம் எந்த மொழியிலும் நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை.

பட்ஜெட்டை கூட தராத படம்

தயாரிப்பு செலவு அதிகரித்ததால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதை ஈடு செய்ய முடியவில்லை. இறுதியில், சாந்தி கிராந்தி நான்கு மொழி பதிப்புகளிலிருந்தும் ரூ. 8 கோடி மட்டுமே ஈட்டியது, இது அந்த படத்தின் பட்ஜெட்டையே மீட்க போதுமானதாக இல்லை. அத்துடன் அந்த படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் படத்தை மேலும் பிளாப்பாக மாற்றியது.

நிலத்தை விற்ற தயாரிப்பாளர்

ரவிச்சந்திரன் சாந்தி கிராந்தியை உருவாக்க தனது வாழ்நாள் சேமிப்பையே செலவிட்டார். விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பெரிய செட்களில் அதிக செலவு செய்தார். இந்த க்ளைமாக்ஸை படமாக்க 50 ஏக்கர் காலியான நிலத்தை கூட அவர் விற்று கடன் வாங்கினார். 1989-90ல் இந்த படத்தால் அவருக்கு ரூ. 10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், படம் ரிலீஸிற்குப் பிறகு மேலும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரீமேக்கை நம்பி உயர்வு

ரவிச்சந்திரனை இந்த படம் அவரை நிதி நெருக்கடியில் ஆழ்த்தியதாகவும், "ஹிட்டிற்காக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் ரீமேக்குகளை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றும் கூறினார். இதையடுத்து அவர் ரீமேக்குகள் படத்தை இயக்கியதன் மூலம் 90களில் அவரது தொழில் வாழ்க்கை மீண்டும் உயர்ந்தது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner