‘உங்க பாஷையில சொல்லணும்னா என் தம்மம்..’ நடிகர் சூர்யாவின் ரியல் லைஃப் தம்மம் என்ன தெரியுமா மக்களே?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘உங்க பாஷையில சொல்லணும்னா என் தம்மம்..’ நடிகர் சூர்யாவின் ரியல் லைஃப் தம்மம் என்ன தெரியுமா மக்களே?

‘உங்க பாஷையில சொல்லணும்னா என் தம்மம்..’ நடிகர் சூர்யாவின் ரியல் லைஃப் தம்மம் என்ன தெரியுமா மக்களே?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 07, 2025 05:40 AM IST

குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்யப் போகிறோம். அதன் பின்னர் ஓய்வு காலத்தை நன்றாக அனுபவிக்க போகிறோம் என்று தான் நினைத்திருந்தேன்.

‘உங்க பாஷையில சொல்லணும்னா என் தம்மம்..’ நடிகர் சூர்யாவின் ரியல் லைஃப் தம்மம் என்ன தெரியுமா மக்களே?
‘உங்க பாஷையில சொல்லணும்னா என் தம்மம்..’ நடிகர் சூர்யாவின் ரியல் லைஃப் தம்மம் என்ன தெரியுமா மக்களே?

நன்றியோடு இருக்கிறீர்கள்

இது குறித்து அவர் பேசும் போது, ‘நீங்கள் உங்களுக்கு கிடைத்தவற்றுக்கு எவ்வளவு நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. நம்முடைய அம்மா,அப்பா எப்படி இருக்கிறார்கள், நம் குழந்தைகள் எவ்வாறான வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

யோசித்தது கிடையாது.

நான் பெரிதாக இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை பற்றி எல்லாம் யோசித்தது கிடையாது. ஆனால், ரெட்ரோ கதையில் தம்மம் என்ற வார்த்தையை கேட்ட பொழுது, எனக்கு அது மிகவும் புதிதாக இருந்தது. நாம் கெரியரை பார்த்துக் கொள்ளப் போகிறோம், எத்தனை வருடங்கள் செல்கிறது என்பதை பார்த்து, அத்தனை வருடங்கள் உழைக்கப் போகிறோம்.

குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்யப் போகிறோம். அதன் பின்னர் ஓய்வு காலத்தை நன்றாக அனுபவிக்க போகிறோம் என்று தான் நினைத்திருந்தேன். இந்த இடத்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய வசனம் ஞாபகம் வருகிறது; இங்கு காசு இருந்தால் ஒரு வாழ்க்கை காசு இல்லையென்றால் ஒரு வாழ்க்கை..

பிற நடிகர்களை பார்க்க ஆரம்பித்தேன். அவர்கள் இந்த சமூகத்திற்காக என்ன செய்தார்கள் என்பதை கவனித்தேன். என்னுடைய திரைப்படமான கஜினி நன்றாக ஓடியது. அதனால் அகரம் கல்வி அறக்கட்டளையை ஆரம்பிக்க முடிந்தது. அதை ஆரம்பிக்கும் பொழுது, இரண்டு பேர் அதைப்பற்றி பேச ஆரம்பித்தோம். அந்த பேச்சுவார்த்தையால் 500 பேர் கூட்டினார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான அவர்கள் உதவுவதற்கு முன் வந்தார்கள்.

உதவினார்கள்

200 பல்கலைக்கழகங்கள் மாணவ மாணவிகளுக்கு இலவச சீட்டுகளை கொடுத்தார்கள். தற்போது கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு கட்டத்தில் யோசிக்கும் போது, நாம் இதற்காகதான் நடிக்க வந்தமோ என்று தோன்றும். நடிக்கிறேன் சம்பளம் வாங்குகிறேன் என்பதை தாண்டி நான் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கிறேன் என்று யோசிக்க வைப்பது இந்த அகரம் பவுண்டேஷன் தான்.

இன்று அங்கு படித்த மாணவர்கள்; படித்தோம் வேலைக்கு சென்றோம் என்றில்லாமல், தன்னுடைய சமூகத்திற்கு தன்னால் என்ன திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். அதை பார்க்கும்போது அழகாக இருக்கிறது.

இந்த மாதிரியான ஒரு இடம் உங்களுக்கு கிடைத்திருக்கும் பொழுது, நீங்கள் எந்த அளவுக்கு பணிவாக இருக்க முடியுமோ இருக்க வேண்டும் எந்த அளவுக்கு நன்றி உள்ளவனாக இருக்க முடியுமோ இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.