Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..

Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 30, 2025 06:30 AM IST

Director Vikraman: இயக்குநர் விக்ரமன் இயக்கிய வானத்தை போல படத்தின் கதை எப்படி கிடைத்தது, இந்த படத்தை எடுக்கும் போது நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..
Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..

முதல் படம் வானத்தை போல தான்..

வானத்தைப் போல திரைப்படம் தான். 2000 ஆம் வருடத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்பம். முதலில் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் போட்டிக்கு படங்கள் வருவதால் 2 நாட்கள் முன்னதாகவே ஜனவரி 13 ஆம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்காக பல கஷ்டங்களை சந்தித்தேன்.

நியூ இயர் விடிஞ்சதே அங்க தான்..

வானத்தை போல படத்துக்கு 1999 டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்கும் ஷூட்டிங் நடக்குது. ஷீட்டிங் முடிஞ்ச அன்னைக்கே ஊருக்கு வந்து நான் எடிட்டிங் ரூம்ல உக்காருறேன். அந்த வருஷமே எனக்கு எடிட்டிங் ரூம்ல தான் தொடங்குனது. ஜனவரி 1 ஆம் தேதி தொடங்குன வேலை 9ஆம் தேதி வரைக்கும் ராத்திரி பகல்ன்னு நடந்தது. 9 ஆம் தேதி எல்லாம் படத்தோட முதல் காப்பி ரெடி ஆகி படம் பாத்துட்டோம். தமிழ் மட்டுமில்ல தென்னிந்தியாவிலேயே 2000 ஆம் ஆண்டுல ரிலீஸ் ஆன முதல் படம் இதுதான்.

நான் யோசிச்ச முதல் சீன் இதான்

இந்தப் படத்துக்கு நான் முதல் முதல்ல வச்ச பேரு அண்ணன் தம்பி. ஆனா இந்தப் படத்துல விஜயகாந்த் சார் நடிக்கிராருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் வானத்தைப் போலன்னு வச்சேன். சின்ன கவுண்டர் படத்துல வர்ற அந்த வானத்த போல மனம் படைச்ச பாட்டுல இன்ஸ்பயர் ஆகி இந்த பேர வச்சேன்.

நான் வானத்த போல படம் எடுக்க முதல் முதல்ல யோசிச்ச சீன் பிரபுதேவா சீன் தான். தமிழ் சினிமாவுல வந்த எத்தனையோ படங்கள்ல அண்ணன் சம்பாதிக்குற காசுல படிச்சிட்டு, பந்தாவா இருந்துட்டு, அண்ணனே யாருன்னே தெரியாது, வேலைக்காரன்னு எல்லாம் சொல்லுவாங்க. இத மாத்தனும்ங்குறதுக்காக தான் இந்த சீனயே வச்சேன்.

எல்லாத்துக்கும் ஒரு காரணம்

இந்தப் படத்துல பல சீன் நெகட்டிவ்வா காட்ட ஆரம்பிச்சு அப்படியே பாசிட்டிவ்வா மாறும். பிரபு தேவா மட்டும் இல்ல, மீனாவோட கேரக்டர் காட்டும் போதும் அப்படி தான். லிவிங்ஸ்டன் மனைவியும் சொல்ற எதையும் கேக்காம இருக்க மாதிரி இருக்கும். அதுக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும். இந்த சீன்ஸ் எல்லாம் தான் வானத்தை போல படம் சக்சஸ் ஆகும் அப்படிங்குற நம்பிக்கைய குடுத்தது.

நான் தப்பு பண்ணிட்டேன்

தமிழ் சினிமா இதுவரைக்கும் பாத்த அண்ணன் தம்பி கதை வேற இந்த கதை வேற. அதுவும் ஒரு ஆக்ஷன் ஹீரோவ பேமிலி ஆடியன்ஸ்காக மாத்தி வச்சிருக்கோம். இது எல்லாமே எனக்கு நம்பிக்கைய அதிகமாக்குச்சு. அதே மாதிரி இந்தப் படத்துல நான் விஜயகாந்த் சார வச்சு தப்பு பண்ணிட்டனோன்னு தோனுச்சு. ஏன்னா அவருக்கு அவ்ழோ ரசிகர்கள் இருக்காங்க. அவருக்கு இந்த படத்துல சண்டை காட்சி எல்லாம் வைக்கலன்னாலும் நான் மாஸான வசனத்த எல்லாம் வச்சிருக்கனும்.

அதுல தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு படத்தோட டப்பிங் அப்போ தோனுனது. விஜயகாந்த் சார் இந்தப் படத்துல ஆரம்பத்துல இருந்தே ரொம்ப மட்டம் தட்டப்பட்ட ஆளா தான் நடிச்சிருப்பாரு. அவரு மண்ண எண்ணுற சீன் மட்டும் தான் மாஸா இருக்கும். மத்தபடி அவருக்கான ஸ்பேஸ நான் குடுக்கலன்னு வருத்தப்பட்டிருக்கேன்.

அவ்ளோ மாஸ் இருக்கு

மண்ண எண்ணுன சீனுக்கே தியேட்டர்ல அவ்ளோ கைதட்டல். அப்படி இருக்கும் போது சின்ன சின்ன மாஸான சீன் சேர்த்திருந்தேன்னா படம் இன்னும் நல்லா ஓடி இருந்திருக்கும். அத நினைச்சு நான் இன்னமும் வருத்தப்படுறேன். ஆனா, தெலுங்குல படத்த ரீமேக் பண்ணும் போது, அந்த டைரக்டர்கிட்ட இத சொன்னேன். அங்க இத எடுத்தாங்க.

ரொம்ப பாராட்டினாங்க

பிரபு தேவா, லிவிங்ஸ்டன் கேரக்டர பத்தி சொல்லும் போதே அவங்களே தன்னை அந்த கேரக்டரா மாத்திக்கிட்டாங்க. அந்த படத்துக்காக அவங்களே சின்ன சின்ன மெனக்கெடல்கள செஞ்சாங்க. அதுவும் லிவிங்ஸ்டன் எல்லாம் அவர் நடிச்ச கேரக்டர ரொம்ப பாராட்டினாரு.

எல்லோருக்கும் கிரெடிட்

அதே மாதிரி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட்ட எழுதுனது 3 பேரு. முதல் பல்லவிய நா. முத்துக்குமார் எழுதுனாரு. அப்புறம் சில வரிகள பா. விஜய் எழுதுனாரு. சிலுவைகளை நீ சுமந்து வரிகளை என்னோட அசிஸ்டன்ட் ரவிசங்கர் எழுதினாரு. இவங்க மூனு பேரும் தனித்தனியா தான் பாட்ட எழுதினாங்க. எல்லாரோட வார்ததையும் பிடிச்சதால தயாரிப்பாளர்கிட்ட சொல்லி 3 பேருக்கும் அந்த பாட்டு எழுதுன காசு கொடுத்தோம். பாட்டுக்கான கிரெடிட் கூட 3 பேருக்கும் கொடுத்தோம். இன்னைக்கு ஐபிஎல்ல சென்னை டீமோட தீம் சாங் அதுதான் என வானத்தை போல படத்தின் சிறப்பான நினைவுகள் பற்றி பேசி இருந்தார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner