Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..
Director Vikraman: இயக்குநர் விக்ரமன் இயக்கிய வானத்தை போல படத்தின் கதை எப்படி கிடைத்தது, இந்த படத்தை எடுக்கும் போது நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Director Vikraman: 'நான் விஜயகாந்த்த வச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்..' ஃபீல் பண்ணும் இயக்குநர் விக்ரமன்..
Director Vikraman: இயக்குநர் விக்ரமன் என்றதும் நம் மனதுக்குள் ஏராளமான எவர்கிரீன் படங்களின் காட்சிகள் மனதிற்குள் தொற்றிக் கொள்ளும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் வானத்தைப் போல. இந்தத் திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் , இயக்குநர் விக்ரமன் வானத்தைப் போல படத்தை பற்றி சினிமா விகடன் யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்ட சிலவற்றை பார்க்கலாம்.
முதல் படம் வானத்தை போல தான்..
வானத்தைப் போல திரைப்படம் தான். 2000 ஆம் வருடத்தில் வெளியான முதல் தமிழ் திரைப்பம். முதலில் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் போட்டிக்கு படங்கள் வருவதால் 2 நாட்கள் முன்னதாகவே ஜனவரி 13 ஆம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்காக பல கஷ்டங்களை சந்தித்தேன்.
