எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸிற்கு என ஒரு மார்க்கெட் வேல்யூ உள்ளது. தற்போது காட்டப்படும் 100 கோடி, 500 கோடி வசூல் கணக்கு எல்லாம் பொய் என நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி கூறியுள்ளார்.

எல்லாம் பொய்.. அப்படி ஒரு படம் எனக்கு தேவையே இல்ல.. புரொடியூசர் எல்லாம் நொந்து போறாங்க.. சுந்தர்.சி கறார்..
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சினிமா பாணியை வைத்து சுமார் 30 வருடங்களாக சிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் தற்போது தயாரிப்பாளராகவும் புது ட்ரெண்ட் செட்டை வைத்திருப்பவர் சுந்தர். சி. இவர் தனது கேங்கர்ஸ் படத்தின் புரொமோஷனுக்காக பிஹைண்ட் உட்ஸ் மீடியாவில் பேசி இருப்பார்.
அப்போது, தொகுப்பாளர் கோபியிடம் இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் கணக்கிடும் முறை குறித்தும் அதன் பின் உள்ள ரகசிய காரணங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
