Shankar: சிலை செதுக்குவது போல்தான் சினிமாவும்.. விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் - இயக்குநர் ஷங்கர்
Director Shankar: யாருடைய கருத்தும் கேட்காமல் நேரடியாக படம் பார்ப்பேன். விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் தான். எனது கனவு படமாக வேள்பாரி கதையை உருவாக்கவுள்ளேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் ஷங்கர், தனது படங்களால் இந்தியா திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தவராக இருந்துள்ளார். வலுவான திரைக்கதை, காட்சியமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள் என தன் படங்களில் மூலம் பார்வையாளர்கள் பிரமிக்க வைத்த ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் பொங்கலுக்கு வெளியானது.
படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தபோதிலும், அடுத்தடுத்த நாள்களில் எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படும் கேம் சேஞ்சர் படம் இதுவரை ரூ. 160 கோடிக்கு மேல் தான் வசூலித்துள்ளது.
இதற்கிடையே இயக்குநர் ஷங்கர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டியில் தனது சினிமா அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.