ஜுரம்னா கூட ரஜினி சார் சூட்டிங் வந்திடுவார்.. பாக்யராஜ் சார் ஆபிஸில் நடக்கும் டிஸ்கசன்.. இயக்குநர் செந்தில்நாதன் பேட்டி
ஜுரம்னா கூட ரஜினி சார் சூட்டிங் வந்திடுவார்.. பாக்யராஜ் சார் ஆபிஸில் நடக்கும் டிஸ்கசன் என இயக்குநர் செந்தில்நாதன் பேட்டி அளித்துள்ளார்.
ஜுரம்னா கூட ரஜினி சார் சூட்டிங் வந்திடுவார் என்றும்; பாக்யராஜ் சார் ஆபிஸில் நடக்கும் டிஸ்கசன் பற்றியும் இயக்குநர் செந்தில்நாதன் பேட்டியளித்துள்ளார்.
ரஜினியுடனான நட்புகுறித்து இயக்குநர் செந்தில்நாதன் மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,''ரஜினி சாரோட நான் சிகப்பு மனிதன் படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரியும்போது சென்னை மவுண்ட் ரோட்டில் சூட்டிங். அங்கு அனுமதியே இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணிக்குள் தான் தருவாங்க. 11 மணிக்கு வருவார், 4 மணி வரை தூங்காமல் இருப்பார். ஷாட் இல்லாத நேரத்தில் ஈரமான துணியைக் கண்ணில் போட்டுக்கிட்டு கண்ணை மூடியிருப்பார். ஜுரம்ன்னா கூட வந்திடுவார். அவ்வளவு சின்ஸியர். அவரைப் பார்க்க நைட் 2 மணிக்கு பர்தா போட்டுக்கிட்டு, கையில் குழந்தையோட முஸ்லீம் பெண்ணுங்க நிற்பாங்க.
அதைப் பார்த்திட்டு என்னிடம், இதையெல்லாம் பார்க்க என் அம்மா இல்லையேன்னு கண்கலங்கினார், ரஜினி சார். அந்தப் படத்தில் உண்மையாகவே சென்ட்ரல் ரயில் ஸ்டேஷனில் எடுத்தாங்க. ஒரு காட்சியில் அவர் ட்ரெயினில் இருந்து இறங்குறார். அந்தக் கூட்டத்தில் ஒரு பையன் இறங்க முந்தியடித்து ட்ரெயினில் விழுந்து இறந்தே போயிட்டான்.
சூட்டிங்கின்போது விறுவிறு நடைபோட்ட ரஜினி:
நான் சிகப்பு மனிதன் படத்தில் மவுண்ட் ரோடில் நடந்து வரும்மாதிரியான காட்சிகள் எடுக்கும்போது, திடீர்னு காரில் இருந்து இறங்குவார். காரின் பின்பகுதியில் கேமரா இருக்கும். கடகடன்னு எடுக்க சொல்லிடுவார். அப்போது அவரை கடந்து போறவங்களுக்கு ரஜினி சாரை பார்த்தவுடன் ஒரு ஆச்சரியம் இருக்கும். உடனே, அந்த கடந்து வந்து காரில் ஏறிடுவார். இந்தப் படத்தில் பாக்யராஜும் நடிச்சிருந்தார்.
இந்தப் படத்தோட டிஸ்கசன் பாக்யராஜ் ஆபிஸில் தான் நடக்கும். உடனே, என்கிட்ட செந்தில் நானும் வரேன்னு சொல்லிடுவார். நான் பாக்யராஜ் சார்கிட்ட சொல்வேன். சரியாக ரஜினி சார் கார் 7 மணிக்கு வந்ததும் கீழே இறங்கி கேட்டுக்கு வந்திடுவார், பாக்யராஜ் சார். அந்த கோயம்புத்தூர் தமிழ்நாடு பண்பாடு அதில் தெரியும். ரஜினி சார் எதிர்க்கவே டிஸ்கசன் நடக்கும். அப்போது பார்த்திபன், லிவிங்ஸ்டன் எல்லோரும் எப்படி பேசுறாங்கன்னு பார்ப்பாங்க. அப்படியே 12 மணி ஆனவுடன் கிளம்புவார் ரஜினி சார். அடுத்து ரஜினி சார், வீட்டில் இருந்து இறங்கி வெளியில் போகும்போது பாக்யராஜ் சாரும் வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பார். அந்த கார் தெருவில் திரும்பும்வரை அங்கேயே நின்று பார்ப்பார், பாக்யராஜ் சார். ஏன் சார் என்று கேட்டால், அது கோயம்புத்தூர் பண்பாடுன்னு சொல்லிடுவார்.
ரஜினி மற்றும் பாக்யராஜிடம் இருந்த நட்பு:
நான் காரில் போகும்போது எனக்கு மரியாதை கொடுக்கமாட்டாங்க. ரஜினி சார் போனால் ரஜினிசார் என்று மரியாதை தருவாங்க. ஏனென்றால், நீங்க ஆக்ஷன் ஹீரோன்னு ரஜினி சார்கிட்ட பாக்யராஜ் சார் சொல்வார்.
அப்படி,பெரிய இடத்துப் பிள்ளை படத்தில் கவுண்டமணி கதை ஆசிரியர், அவர் பெரிய ஹீரோவைப் பார்த்து கதை சொல்ற மாதிரி ஒரு காட்சி எழுதியிருந்தேன். அப்போது ரஜினி சார் சொன்ன பிராமிஸ் நினைவுக்கு வருது. அப்போது குரு சிஷ்யன் படத்தில் அவர் இருக்கிறார். அவரை சூட்டிங்கின்போது பார்க்கப்போறேன். படத்தில் ஒரு சின்னகெஸ்ட் ரோல் செய்யணும்னு சொன்னதும் உடனே, ஒத்துக்கிட்டார். கதையின்படி, கவுண்டமணி அவரிடம் வாய்ப்புகேட்பதுபோலான காட்சிகள் அவரது வீட்டிலேயே போய் எடுத்திட்டு வந்திட்டோம்'' என்றார், இயக்குநர் செந்தில் நாதன்.
நன்றி: மீடியா சர்க்கிள் யூட்யூப்
டாபிக்ஸ்