Director Shankar: “பிளாக் ஷீப்..” வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி..சட்ட நடவடிக்கை பாயும்! இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை
வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி அடித்து உருவாகும் படம். அதன் புத்தக உரிமை பெற்றிருக்கும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது உரிமையின்றி நாவல் காட்சிகளை படமாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இயக்குநர் ஷங்கரின் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான இந்த படம் ரசிகர்களை கவராமல் போனதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கோட்டை விட்டது.
இந்த படத்தை தொடர்ந்து நேரடி தெலுங்கு படமாக இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், சமுத்திரகனி, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் பிஸியாக உள்ளார்.
வேள்பாரி நாவல் சம்பவங்கள் காப்பி
தமிழில் பிரபல வார இதழில் வெளியான, எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான சு. வெங்கடேசன் எழுதிய வேல்பாரி என்ற நாவலில் காப்புரிமையை இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ளார்.
