ஹைதராபாத்தில் வாரணாசியை உருவாக்கி வரும் ராஜமௌலி.. அடுத்த பிரம்மாண்டத்தை தயார் செய்யும் படக்குழு..
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படத்தின் முக்கிய காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் வாரணாசி செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹைதராபாத்தில் வாரணாசியை உருவாக்கி வரும் ராஜமௌலி.. அடுத்த பிரம்மாண்டத்தை தயார் செய்யும் படக்குழு..
பிரமாண்டமான திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவராக அறியப்படும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அவரது வரவிருக்கும் படத்திலும் பிரம்மாண்டத்தை ஒரு படி மேலே கொண்டு செல்ல இலக்கு வைத்துள்ளார். இதுகுறித்த பேச்சுகள் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
SSMB29
தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனஸ், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் ராஜமௌலி ஒரு படம் இயக்கி வருகிறார். எஸ்எஸ்எம்பி 29 என்ற தற்காலிக தலைப்பில் இந்த படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே இரண்டு முக்கிய ஷெட்யூல்களை முடித்துள்ள இந்த படத்தின் புதிய ஷெட்யூல் விரைவில் கென்யாவில் தொடங்க உள்ளது.