சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த உமா ரமணன்! பிடிவாதம் பிடித்த பேரரசு! அடுத்தடுத்து பாடிய 2 பாடல்கள்!
இந்த இரண்டு பாடல்களும் உமா ரமணனின் கேரியரில் மிகவும் வித்தியாசமான டிரெண்டிங் பாடல்களாகும். இதனையடுத்து இந்த ஆண்டு உமா ரமணன் நம்மை விட்டு பிரிந்தாலும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
![சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த உமா ரமணன்! பிடிவாதம் பிடித்த பேரரசு! அடுத்தடுத்து பாடிய 2 பாடல்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த உமா ரமணன்! பிடிவாதம் பிடித்த பேரரசு! அடுத்தடுத்து பாடிய 2 பாடல்கள்](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/01/550x309/uma_ramanan_1735715258483_1735715266358.png)
2024 ஆவது ஆண்டு தமிழ் சினிமாவின் தரமான ஆண்டு எனக் கூறலாம். உலகத் தரத்திலான படங்கள், அற்புதமான அறிமுக இயக்குநர்கள் என பல சிறப்பான நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் ஒரு சில படங்களின் சறுக்கல்கள், எதிர்பார்த்த படங்களின் தோல்வி என சில ஏமாற்றங்கள் அளித்தாலும் போன ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்தது எனக் கூறலாம். இந்த நிலையில் பல சினிமா பிரபலங்களும் நம்மை விட்டு மறந்தனர். வயது மூப்பு காரணமாக அவர்கள் மறைந்த போதிலும் அவர்களின் இடத்தை நிரப்ப முடியாத அளவிற்கு தான் அவர்களது இழப்பு இருந்தது எனக் கூறலாம். அந்த வரிசையில் நம்மை விட்டு மறைந்த பின்னணி பாடகி உமா ரமணன் என்றைக்கும் அவரது பாடலால் நினைவு கூறப்படுகிறார்.
பாடகர் உமா ரமணன்
1977 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ கிருஷ்ண லீலா படத்தில் பாடகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் இரண்டாவதாக நிழல்கள் படத்தில் பாடிய “பூங்கதவே தாழ்திறவாய்” பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். மேலும் இவரது மெல்லிசைக் குரல் பாடல்களின் தொகுப்பு இன்று வரை நமது ப்ளே லிஸ்ட்டில் இருந்து வருகிறது. இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பிரம்மிக்கவே வைத்தது.
இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. ரமணனைச் சந்தித்தார். அப்போது ரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.
பேரரசுவிற்கு பிடித்த பாடகர்
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு விஜயின் திருப்பாச்சி மூலம் அறிமுகமான இயக்குனர் பேரரசு, அடுத்து அவரை வைத்தே சிவகாசி படத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்த இரண்டு படங்களின் மூலம் தமிஜ ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்தார். இவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதன் காரணமாக தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.
ஆனால் தனது சிறு வயதில் இருந்தே பாடகர் உமா ரமணனை பேரரசுவிற்கு மிகவும் பிடிக்குமாம். இதன் காரணமாக அவரது முதல் இரண்டு படங்களிலும் இவரை பாட வைத்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் இருந்து சினிமாக்களில் பாடல் எதையும் பாடவில்லை. 5 ஆண்டுகள் கழித்து பேரரசுவின் பிடிவாதத்தால் 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி படத்தில் “கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு” என்ற பாடலையும், சிவகாசி படத்தில் “இது என்ன இது என்ன” என்ற பாடலையும் பாடினார். இந்த இரண்டு பாடல்களுக்கு பின் உமா ரமணன் சினிமாவில் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பாடல்களும் உமா ரமணனின் கேரியரில் மிகவும் வித்தியாசமான டிரெண்டிங் பாடல்களாகும். இதனையடுத்து இந்த ஆண்டு உமா ரமணன் நம்மை விட்டு பிரிந்தாலும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்