Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?
Santosh Movie: சந்தோஷ் படத்தை திரையிட்டால் போலீசார் கைது செய்வார்கள் என்றால் அதற்கும் தயாராகத் தான் இருப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசி இருக்கிறார். அப்படி தடை செய்யப்படும் அளவு சந்தோஷ் படம் என்ன பேசுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?
Santosh Movie: தமிழில் அதிகம் பொழுதுபோக்கு படங்களும், கமர்ஷியல் படங்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் மக்களுக்கான அரசியலையும் வாழ்வியலையும் திரை வழியாக பேசி மாற்றம் கண்டவர் பா.ரஞ்சித். இவர், தான் சார்ந்த மக்களின் உரிமைகளையும் வலிகளையும் வரலாறுகளையும் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
வானம் கலை திருவிழா
அத்தோடு நில்லாமல், சமூக அக்கறை கொண்ட நீலம் பண்பாட்டு மையம்., நீலம் இதழ் உள்ளிட்ட சில முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார். இதனை முன்னிட்டு தற்போது, நீலம் புத்தக அரங்கில் வானம் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வழக்கமாக உலக சினிமாக்களையும், சமூகம் சார்ந்து எடுக்கப்பட்ட சினிமாக்களையும், சில தடை செய்யப்பட்ட சினிமாக்களையும் மக்களுக்கு திரையிட்டு காட்டப்படுவதுண்டு.