Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?

Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?

Malavica Natarajan HT Tamil
Published Apr 08, 2025 05:30 AM IST

Santosh Movie: சந்தோஷ் படத்தை திரையிட்டால் போலீசார் கைது செய்வார்கள் என்றால் அதற்கும் தயாராகத் தான் இருப்பதாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசி இருக்கிறார். அப்படி தடை செய்யப்படும் அளவு சந்தோஷ் படம் என்ன பேசுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?
Santosh Movie: தடை செய்யப்பட்ட படத்திற்காக துணிந்து நிற்கும் பா.ரஞ்சித்.. சந்தோஷிற்கு என்ன தான் பிரச்சனை?

வானம் கலை திருவிழா

அத்தோடு நில்லாமல், சமூக அக்கறை கொண்ட நீலம் பண்பாட்டு மையம்., நீலம் இதழ் உள்ளிட்ட சில முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார். இதனை முன்னிட்டு தற்போது, நீலம் புத்தக அரங்கில் வானம் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வழக்கமாக உலக சினிமாக்களையும், சமூகம் சார்ந்து எடுக்கப்பட்ட சினிமாக்களையும், சில தடை செய்யப்பட்ட சினிமாக்களையும் மக்களுக்கு திரையிட்டு காட்டப்படுவதுண்டு.

அந்த வகையில் தான், இந்த விழாவில் பிரிட்டிஷ் சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட, ஆசிய, கேன்ஸ் திரைப்பட விருதுகளை பெற்ற சந்தோஷ் படத்தை பிரசாத் தியேட்டரில் திரையிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

சிறை செல்லவும் தயார்

இதையறிந்த போலீசார், சந்தோஷ் படம் இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி படத்தை திரையிடக் கூடாது என கூறியுள்ளனர், அத்துடன் இத்திரைப்படத்தை அனுமதியின்றி திரையிட்டால் தியேட்டருக்கான உரிமம் பறிபோவதாகவும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இந்த சமயத்தில் சந்தோஷ் படத்தை பற்றி பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், " சந்தோஷ் திரைப்படத்தை இங்கு திரையிட முடியவில்லை என்றால் பொது வெளியில் திரையிடுவோம். அதற்காக என்னை கைது செய்தால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். அதுவும் புது அனுபவமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் படம்

இப்படி, சந்தோஷ் திரைப்படத்தை மத்திய தணிக்கை வாரியமும், போலீசாரும் திரையிட மறுப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம். பெண் வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் காவல்துறையினரின் வன்முறையை சித்தரிப்பது என படத்தின் பல காட்சிகள் சந்தோஷ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை சந்தியா சூரி இயக்க பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனங்களால் கூட்டாகத் தயாரிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான சந்தோஷ் படம், வட இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் சம்பவங்களை சித்தரிப்பதாக உள்ளது. இந்தப் படம், ஒரு இளம் விதவை காவல்துறையில் சேர்ந்து ஒரு இளம் தலித் பெண்ணின் கொலையை விசாரிக்கும் காட்சியைக் காட்டுகிறது. ஷஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தணிக்கை வாரியத்தின் முடிவு

இந்தி மொழியில் வெளியாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் கொண்டாடடப்பட்டாலும், இந்தியாவில் வெளியாவதில் சிக்கல் தான் நீடித்தது. இந்தப் படத்தின் இயக்குநர் எந்தவித மாற்றமும் இன்றி படத்தை இந்தியாவில் அப்படியே திரையிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால், இந்தப் படத்தில் சில சாதிகள் அவர்கள் இருந்த விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, சில கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றுவது உள்ளிட்ட மாற்றங்களை செய்ய வேண்டும் என மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கூறியிருந்தது.

வேறு வழியை யோசிக்கும் படக்குழு

ஆனால், இதனை படக்குழுவினர் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு கூறிய மாற்றங்களை செய்தால் பாதி படத்திற்கும் மேல் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்றும் இந்தப் படத்தின் தன்மையையே அது இழந்துவிடும் என்றும் கூறி இருக்கிறது. இந்தியாவில் படம் வெளியாவது மிகவும் முக்கியமானது. அதை செயல்படுத்த வேறு வழி இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாக இயக்குநர் சந்தியா சூரி கூறியிருக்கிறார்.

தங்கு தடையின்றி பரவும்

இருப்பினும், தற்போது தொழில்நுட்பங்கள் எல்லாம் வளர்ந்து வரும் காலத்திலும், மாற்றத்திற்காக இளைஞர்கள் பலர் சிந்திக்கும் வேளையிலும் இது போன்ற படங்கள் தடையின்றி, மற்றவர்களுக்கு எளிதில் கடத்தப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தை பதிவிறக்கம் செய்வதற்கோ, முக்கிய காட்சிகளையும் படத்தின் கதையை அறிவதற்கும் பல வழிகள் உள்ளதெனவும் கூறுகின்றனர்.