பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர்.. என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன் - இயக்குனர் மிஷ்கின்!
பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் நான் கீழே விழுந்தபோது பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என தெரிவித்துள்ளார்.
பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். நான் கீழே விழுந்தபோது பிசாசு படம் மூலம் கைகொடுத்தவர் பாலா என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும்; பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, மாரி செல்வராஜ், ஜிவி பிரகாஷ், மிஷ்கின், அருண் விஜய் என ஏகப்பட்டோர் கலந்துகொண்டார்கள். இதில் மிஷ்கின் உருக்கமாக பேசினார்.
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “நான் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெரிதாக போகவில்லை ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு என்னை அழைத்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தோம். அப்போது பாலா என்னை பார்த்து எனக்கு படம் பண்றியா டா என்று கேட்டார். அப்படி பண்ணிய படம்தான் பிசாசு. நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் என் கையைப் பிடித்து ஒரு படத்தை கொடுத்தார் பாலா.
என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். 100 வருடத்திற்குள் அனைவரும் இறந்து விடுவார்கள் ஆனால் இளையராஜா, பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
இயக்குனர்கள் பேரரசு,விக்ரமன், ஆர் வி உதயகுமார்
இவரை தொடர்ந்து இயக்குனர்கள் பேரரசு,விக்ரமன், ஆர் வி உதயகுமார் பேசுகையில், “தமிழ் சினிமாவில் எத்தனையோ வளர்ச்சிகள்,மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது ஆனால் இத்தனை வருடமும் மாறாத ஒன்று பாலா படமும் அதன் தரமும் மட்டும் தான்.
நாங்கெல்லாம் மணிரத்தினம் பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆட்களை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தோம். ஆனால் இப்ப உள்ள 2k கிட்ஸ் எல்லாம் பாலாவை பார்த்து தான் சினிமாவுக்கு வருகிறார்கள் என இயக்குனர் விக்ரமன் கூறினார்.
இயக்குனர் பாலாவை தவிர யாரும் இல்லை
தொடந்து பேசிய பேரரசு, நடிகர்களுக்கு பாலா படத்தில் நடித்து விட்டால் அது மிக பெரிய அங்கீகாரம் என பேசினார். இறுதியாக பேசிய ஆர் வி உதயகுமார், ஒரு காலத்தில் எம் ஜி ஆர்,சிவாஜி ,ரஜனி கமல் படம் என்று ரசிகர்கள் இருந்த காலத்திலும், பின்பு இயக்குனர்களில் மணிரத்னம்,பாரதிராஜா பாலுமகேந்திரா இருந்த வரிசையில் திரையரங்கில் ஒரு இயக்குனர் பெயரை சொல்லி எழுந்து நின்று கைதட்டினால் என்றால் அது பாலாவுக்கு தான். நடிகர்களை கொடுமை படுத்துவதில் இயக்குனர் பாலாவை தவிர யாரும் இல்லை அதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்