“நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்

“நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்

Malavica Natarajan HT Tamil
Published Nov 25, 2024 01:41 PM IST

பழனி பஞ்சாமிர்தம் குறித்த கருத்துகளை விசாரிக்காமல் கூறிவிட்டேன். அதற்காக ஆழ்மனதிலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்
“நான் அப்படி செய்திருக்கக் கூடாது.. ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்”.. சரணடைந்த இயக்குநர்

இது வைரலான நிலையில், அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்த நிலையில், மோகன் ஜி தனது சோசியல் மீடியா தளங்களில் பழநி பஞாசமிர்தம் பற்றிய அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

ஐபிசி தமிழில் பேட்டி

"கடந்த செப்டம்பர் 20ம் தேதி பழநி பஞ்சாமிர்தம் குறித்து ஐபிசி தமிழ் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டி குறித்து, நான் அவதூறு பரப்புவதாக பழநி அடிவார காவல் நிலையத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்திருந்தாங்க. அதற்காக நான் பெயில் அப்ளை பண்ணிருந்தேன். அதுகுறித்த காணொலி தான் இது. வெறுமனே செவி வழி செய்தியாக நான் கேள்விப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தாமல், தீர விசாரிக்காமல் நான் காணொலியில் பஞ்சாமிர்தம் குறித்து பேசி இருக்கக் கூடாது. அதனால் தான் என் மீது வழக்கு.

ஆழ்மனதிலிருந்து வருத்தம்

இனி இந்த மாதிரியான செயல்கள் தொடராது. நான் கூறிய அந்தக் கருத்தால் யார் மனதாவது காயப்பட்டிருந்தாலோ புண்பட்டிருந்தாலோ அதை அவதூறாக நினைத்திருந்தாலோ என் ஆழ்மனதிலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இதுபோல செய்திகளை தீர விசாரிக்காமல் தெரிவிக்க மாட்டேன் என இந்தக் காணொலி மூலமாக கூறிக்கொண்டு என் வருத்தத்தை பதிவு செய்கிறேன். நன்றி." எனக் கூறியுள்ளார்.

பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு

முன்னதாக பஞ்சாமிர்தம் குறித்து மோகன் ஜி அளித்த பேட்டியில், நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலந்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த செய்தியை நான் செவி வழியாக கேள்விப்படிருக்கிறேன். ஆனால், இதுகுறித்த செய்தி மக்களுக்கு தெரியாமல் இருக்க வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையும் அழித்துவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன் எனக் கூறினார்.

மேலும், அந்தக் கோயிலில் பணி புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தனர் என்றும் கூறியிருந்தார்.

மோகன் ஜி கைது

இந்த வீடியோ வெளியானதை அடுத்து, திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அளித்த புகாரின் காரணமாக, மோகன் ஜி கைதும் செய்யப்பட்டார். பின் அவர் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பளித்த நீதிமன்றம்

இந்நிலையில், நீதிமன்றம் பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கருத்து தெரிவித்த யூடியூப் சேனலிலும், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு அதனை விளம்பரமாக வெளியிட வேண்டும். மனுதாரர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்த வேண்டும்.

பழநி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்துக்கு சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். உண்மையிலேயே கோயில் மீது அக்கறை இருந்தால் பழநிக்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.