Mohan G: பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை... பகாசூரனை பட்டுன்னு தூக்கிய போலீசார்... புலம்பும் பாஜக
Mohan G: திருப்பதி லட்டு விவகாரம், பழநி பஞ்சாமிர்தம் குறித்து தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வந்த இயக்குநர் மோகன் ஜி-யை போலீசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பதி லட்டில் விலங்குகளின் எச்சங்கள் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இ்ந்த சம்பவத்தில் இந்து மக்களின் மனம் புண்படும்படி சிலர் நடந்துவிட்டதாகக் கூறி பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த சிலர் மிகவும் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடி வந்தனர்.
பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை
இந்த நிலையில், தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படும் முருகக் கடவுளின் கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து இயக்குநர் மோகன் ஜி மிகவும் மோசமான கருத்து ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பழநி கோயிலைப் பற்றி கூறுகிறீர்களா என கேட்டதற்கு தான் கேள்விப்பட்டவற்றை கூறினேன் என பதிலளித்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது எனக் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதற்றத்தை ஏற்படுத்திய மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.