Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?

Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?

Malavica Natarajan HT Tamil
Jan 26, 2025 07:36 AM IST

Director Maniratnam: அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் இயக்க முதலில் திட்டமிட்டு, பின் அந்த யோசனையைக் கைவிட்டதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?
Director Maniratnam: 'அலைபாயுதே படத்தில் நான் நினைத்தது நடக்கல'- மணிரத்னம் சொல்வது என்ன?

நிறைவேறாத மணிரத்னம் ஆசை

ஆனால், அந்தப் படத்தை தான் நினைத்து போல் இயக்க முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் நேற்று (ஜனவரி 25) மும்பையில் நடந்த G5A ரெட்ராஸ்பெக்டிவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிரத்னம் இதனை தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், " 2000 ஆம் ஆண்டு வெளியான 'அலைபாயுதே' படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் இயக்க முதலில் திட்டமிட்டதாகவும், ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைப்பது என்று தெரியாமல் அந்த யோசனையைக் கைவிட்டதாகவும் கூறினார்.

ஓகே சொல்லியும் முடியவில்லை

ஷாருக்கான் மற்றும் கஜோலை வைத்து 'அலைபாயுதே' படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தேன். ஷாருக்கானுக்கு கதையை சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கதையின் கடைசிப் பகுதியை எப்படி கொண்டு செல்லலாம் என அப்போது நான் இன்னும் முடிவு செய்யாமல் இருந்தேன்.

இப்போது வெளியாகியிருக்கும் 'அலைபாயுதே' படத்தைப் பார்த்தால் அது ஒரு நாளைச் சுற்றி நடக்கும் கதையாக இருக்கும். விபத்து நடந்து மனைவி காணாமல் போனதும், கணவர் அவரைத் தேடும் காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

உயிரேவில் கிடைத்த க்ளைமேக்ஸ்

அந்தக் காட்சியை அப்போது நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அதனால், இந்தப் படத்தை விட்டுவிட்டு 'உயிரே' படத்தை இயக்கத் தொடங்கினோம்”. 1998 ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான 'உயிரே' படத்தை இயக்கும்போது தான் 'அலைபாயுதே' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இறுதியாக முடிவு செய்தேன் எனக் கூறினார்.

“'உயிரே' படத்தை முடிக்கும்போது, இந்தப் பிரச்சனையையும் என்னால் தீர்க்க முடிந்தது. அதனால் இந்தப் படத்தை இயக்க இன்னும் ஆர்வமாக இருந்தேன்”. ஒவ்வொரு படமும் கதை எழுதுவது முதல் நடிகர்கள் தேர்வு, எடிட்டிங் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல மாற்றங்களுக்கு உள்ளாகும்.

தொடர் முயற்சி

“நீங்கள் ஒரு படத்தை முழுமையாக திருப்திகரமாக செய்துவிட்டீர்கள் என்று உங்களுக்கு ஒருபோதும் உறுதியாகத் தெரியாது. நீங்கள் இன்னும் முயற்சி செய்துகொண்டே இருப்பீர்கள். நீங்கள் முழுமையாக கதையை எழுதிய பிறகும், படப்பிடிப்பு நடக்கும்போது, நீங்கள் இன்னும் ஏதாவது தேடிக் கொண்டே இருப்பீர்கள், ஏனெனில் ஒரு படம் வெளியாகும் தருணம் வரை மேலும் மேலும் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

திரைப்படங்கள் “மக்களின் வாழ்க்கையில் நடந்த அல்லது நடப்பதாக கற்பனை செய்யப்பட்ட ஒரு சில காட்சிகள். அவ்வளவு தான் அது ஒருபோதும் முழு வாழ்க்கையின் பிரதிபலிப்பாகக் காட்ட முடியாது என்றார்.

உங்கள் கதையை நடிகர்கள் வந்து அதை உயிர்ப்பிக்க வேண்டும், அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் அவர்களை திட்டவும் செய்யலாம். எடிட்டிங் செய்யும்போதும் கூட படத்தை சரிசெய்யும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது என அவர் கூறினார்.

ரெட்ராஸ்பெக்டிவ் நிகழ்ச்சி

மும்பையின் தெற்கில் உள்ள G5A நிறுவனத்தில், ஜனவரி 24 முதல் 26 வரை மணிரத்னத்தின் படங்கள் மீது மூன்று நாள் ரெட்ராஸ்பெக்டிவ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், 'நாயகன்', 'பாம்பே', 'ராவணன்', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'காற்று வெளியிடை', 'அலைபாயுதே' மற்றும் 'இருவர்' போன்ற படங்கள் திரையிடப்படும்.

தசாப்தங்கள் தாண்டி ரூல் செய்யும் படம்

தமிழில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளியான அலைபாயுதே படம் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் எப்போதும் எவர்கிரீன் தான். இன்றும் அது இசை விரும்பிகளின் ப்ளே லிஸ்ட்டை ரூல் செய்கிறது. அதன் தாக்கம் தான் அந்தப் படத்தின் பாடல்களை இப்போது எடுக்கும் படத்தில் ரீமேக் செய்யும் வரை தூண்டி உள்ளது.

மேலும் தமிழில் வெளியான இந்தப் படத்தை முன்னதாக, 'சாத்தியா' என்ற பெயரில் ராணி முகர்ஜி மற்றும் விவேக் ஓபராய் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்துகொள்ளும் இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை ஷாத் அலி இயக்கியிருந்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.