'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

Karthikeyan S HT Tamil
Published Jun 08, 2025 05:03 PM IST

மணிரத்னத்தைப் பாராட்டிய அமீர் கான், "நான் அவரது படைப்புகளின் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள், அவரும் நானும் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?
'நானும் மணிரத்னமும் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவோம்' - அமீர் கான் சொன்ன கதை என்ன?

சமீபத்தில் கலாட்டா ப்ளஸூக்கு அளித்த நேர்காணலில் பேசிய அமீர் கான், ஒரு திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால், அது கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அமீர் கான் அளித்துள்ள பேட்டியில், "புகழ்பெற்ற இந்திய உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் சிறுகதையான கர்வாலி (தி ஹோம்வைஃப்)-ஐ அதன் கதாநாயகன் லஜ்ஜோவை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமாக மாற்றுவதில் நாங்கள் ஆர்வமாக இருந்தோம். நான் எப்போதும் மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகன். எப்போதுமே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன்.

நானும் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். நான் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன், நாங்கள் அற்புதமான உரையாடல்களை நடத்தியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்ற விரும்பினோம். லஜ்ஜோவில் கிட்டத்தட்ட இருவரும் இணைந்து பணியாற்ற தயாரானோம். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்கும் அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

மணிரத்னத்தைப் பாராட்டிய அமீர், "நான் அவரது படைப்புகளின் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள், அவரும் நானும் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சிதாரே ஜமீன் பர்

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னாவின் சிதாரே ஜமீன் பர் படத்தின் மூலம் அமீர் கான் மீண்டும் சினிமாவுக்கு வரவிருக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜெனிலியா தேஷ்முக்குடன் இணைந்து நடித்துள்ளார். நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ஆரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பெண்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர் மற்றும் ஆயுஷ் பன்சாலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தாரே ஜமீன் பரின் ஆன்மீகத் தொடர்ச்சியான இந்த திரைப்படம் ஒரு கூடைப்பந்து போட்டியில் தங்களை நிரூபிக்க முன்னேறும்போது அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இப்படத்தில் அமீர் கான் ஒரு பெரிய கூடைப்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக நடிக்கிறார். அவரது வேலையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு செல்ல உத்தரவிடப்படுகிறார் அல்லது சிறப்பு திறன் கொண்ட கூடைப்பந்து வீரர்களின் குழுவின் பயிற்சியாளராக 90 நாட்கள் சமூக சேவை செய்ய உத்தரவிடப்படுகிறார். அமீர் கான் புரொடக்ஷன்ஸ் இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.