Director lingusamy: அட்டர் ஃப்ளாப் ஆன அஞ்சான்.. வறுத்தெடுத்து கண்டமாக்கிய நெட்டிசன்ஸ்! - உடைத்து பேசிய லிங்குசாமி!
நான் எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய திரைப்படம் வெளியாகும் பொழுது, நான் சென்னைக்கு வந்து ரோகிணி தியேட்டர் அருகில் அமர்ந்தது, கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்தது, கடன் வைத்து சூடாக இட்லி சாப்பிட்டது உள்ளிட்ட பலவை நினைவுக்கு வரும்.

இயக்குநர் லிங்குசாமி பேட்டி!
சூர்யாவுடன் தான் இணைந்த அஞ்சான் பட தோல்வி அடைந்தது குறித்தும், தன் மீது தொடுக்கப்படும் நெகட்டிவான கமெண்டுகள் குறித்தும் இயக்குநர் லிங்குசாமி அண்மையில் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “வெளியில் இருந்து பார்ப்பவர்கள்தான் என்னுடைய வெற்றி தோல்வியை எடை போடுவார்கள். என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு அம்சத்தை நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
நான் எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய திரைப்படம் வெளியாகும் பொழுது, நான் சென்னைக்கு வந்து ரோகிணி தியேட்டர் அருகில் அமர்ந்தது, கிணற்றில் தண்ணீர் எடுத்து குளித்தது, கடன் வைத்து சூடாக இட்லி சாப்பிட்டது உள்ளிட்ட பலவை நினைவுக்கு வரும்.
