Kiruthika Udhayanidhi Exclusive: 'காதல்ல தேவை மாறிட்டே இருக்கும்.. எல்லாம் அனுபவம் தான்'- கிருத்திகா உதயநிதி
Kiruthika Udhayanidhi Exclusive: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு அளித்த இயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி அளித்துள்ளார்.

Kiruthika Udhayanidhi Exclusive: காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் கிருத்திகா உதயநிதி தனது நான்காவது படைப்பை மக்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் அவர் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. நித்யா மேனன் மற்றும் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.
கிருத்திகா உதயநிதி
இந்தப் படம் புதியதாகவும், தைரியமாகவும், பல எல்லைகளைக் கடந்து இருப்பதாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. படத்தின் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த கிருத்திகா ஒரு இயக்குநராக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகளுமான கிருத்திகா, ஒரு இயக்குநராக அவரது பயணம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நம்மிடம் பேசியுள்ளார்.
வெகுஜன மக்களிடம் தாக்கம்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் யோசிச்ச கதை இதுன்னாலும் இந்த நேரத்தில் இதை சொன்னால் இது ஒரு பெரிய கதையா இருக்கும்ன்னு நினைச்சேன். காதல் எப்போதும் எல்லாவற்றையும் வெல்லும். அது நமக்கு தெரிந்தாலும், காதலில் தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும். அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். காதல் இன்னும் வலுவாக இருக்கிறது.
நான் படத்திற்கான விளம்பரங்களையும், அதன் தாக்கத்தையும் அது வெகுஜனங்களைப் பூர்த்தி செய்யுமா என்றும் பார்க்கவில்லை. இந்தப் படம் ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஜெயம் ரவியை தேர்வு செய்தது ஏன்?
இதுவரை நித்யாவும் ரவியும் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் இணைந்து நடித்தால் புதுமையாக இருக்கும் என்று நினைத்தேன். ரவியும் கதையில் சிலவற்றை கூறியிருந்தார். ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சமமான கேரக்டர் ரோல் இருக்கும் இது போன்ற கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் சிலர் தான்.
மேலும் இது வழக்கமான படங்களில் இருந்து வேறுபட்டது, இதில் நிறைய அதிரடி மற்றும் வன்முறை உள்ளது. ரவியும் தைரியமாக ஓகே, இதை ட்ரை செய்து பார்த்து ஆடியன்ஸுக்கு புதுசு புதுசா கொடுக்கலாம்ன்னு நினைச்சாரு.
காளி படம் ஒர்க்அவுட் ஆகாததால இந்த ஜானர் படமா?
நான் ஒரு கதையை நினைத்து எழுதும்போது படத்தின் ஜானரை முக்கியமாக எடுத்து வேலை செய்வதில்லை. அநேகமாக அது வெளியாகும் போது மட்டும் தான் அதை பற்றிய பேச்சே வரும். அதுவும் மக்கள் அந்தப் படத்திற்கு ஒரு லேபில் குத்தும் போது தான் அது வெளியவே தெரியும்.
என்னோட எல்லா திரைப்படங்களும், எப்போதும் ஒரு நாடகத் தன்மையாலும் உணர்ச்சிகளால் தான் நகரும். காளி கூட உணர்ச்சிகளைப் பற்றிய படம் தான். அது ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை தனது சொந்த அடையாளத்துடன் போராடுவதைப் பற்றியது. அந்தக் குழந்தை தனது குடும்பத்தின் வேர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வது.
ஒருவேளை அந்த படத்திற்காக, புள்ளிகள் பார்வையாளர்களுக்கு சரியாக இணைக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் திரைக்கதைகள், நடிகர்கள் மற்றும் எல்லாவற்றிலும் எதிர்காலத்தில் நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது குறித்த வித்தியாசமான கண்ணோட்டத்தை அந்தப் படம் எனக்கு வழங்கியது. தவறுகளிலிருந்து கூட இது ஒரு சிறந்த கற்றல் அனுபவம் கிடைக்கும்.
பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் கூட அப்படி தானா?
என்னோட கதைகள் மீதும் திரைப்படத்தை இயக்குவதன் மீதும் நான் ரொம்ப ஆர்வமாக இருக்கேன், நான் எனது முதல் படத்தை எடுத்த போது எனக்கு அனுபவம் இல்லை. அதிக உலக அறிவோ அதிக உலக சினிமா பற்றிய புரிதலோ இல்லை. இப்போது, நான் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மற்றும் வெளிநாட்டு மொழி படங்களைப் பார்க்கிறேன்.
அவர்கள் சரியாக என்ன செய்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் நாம் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள நான் இங்குள்ள இயக்குனர்களுடன் பேசுகிறேன். மேலும் எனது கற்றலும் சிறப்பாக உள்ளது.
வயது மற்றும் ஞானத்துடன், சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதில் இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும். எனக்கு திரைப்படத்தை இயக்குவது தெரியாது என்று நான் இன்னும் உணர்கிறேன். திரைப்பட படிப்புகளில் சேரவும் விரும்புகிறேன்.
நித்யா மேனன் உங்களுக்கு கிடத்த பரிசா?
நித்யா மேனனுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஸ்ரேயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நீங்கள் உங்கள் கற்பனையிலிருந்து ஒரு கதாபாத்திரத்தை எழுதுகிறீர்கள், பின்னர் யாரோ ஒருவர் அதை நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உயிர் தருகிறார் என்றால் அதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது.
இப்போது நாங்கள் சிறந்த நண்பர்களாகிவிட்டோம், எங்கள் உணர்வுகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஒன்றாக உள்ளது. இரண்டு நண்பர்கள் செட்டில் வேலை செய்வது போல் இருந்தது. அடுத்த முறை, நான் என் படத்திற்கு நடிகர்களைத் தேடும்போது, நான் எப்போதும் நித்யாவைத் தான் முதலில் தேடுவேன், அந்த வகையான திறமையைப் பெறுவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஓகே சொன்னது பெரிய விஷயம்
ஏ.ஆர்.ரஹ்மான் என் ஸ்கிரிப்டுக்கு ஓகே சொன்னது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். ஒரு திரைப்பட இயக்குநராக இது என் வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்றாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகவே நாம் அனைவரும் வாழ்கிறோம்.
இதற்குப் பிறகு ஒவ்வொரு படத்துக்கும் ரஹ்மான் ஓகே சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான், நித்யா மேனன் மற்றும் ரவி ஆகியோருடன் பணிபுரிவது என் சிந்தனைகளை உயர்த்தியது. மேலும் நான் ஒரு நல்ல படைப்பை வழங்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்தேன்" என்றார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்