“நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

“நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

Suguna Devi P HT Tamil
Updated May 03, 2025 02:57 PM IST

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வெளியான ரெட்ரோ படத்திற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து படத்தின் இயக்குனர் எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .

“நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
“நல்ல நேரம் ஆரம்பம்" ரெட்ரோ பட வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோ

சந்தியாவின் கருணையால் அனாதையாக விடப்பட்ட பாரி சந்தியாவின் கணவர் திலகரிடம் மகனாக தஞ்சம் அடையும் நிலை ஏற்படுகிறது. பாரி திலகரை அப்பாவாக பார்த்தாலும், திலகர் பாரியை தன்னைப் பாதுக்காக்கும் இரும்புக்கை அடியாளாகவே பார்க்கிறான்.

கோபம், அடிதடி, சண்டை என ரணகளமாக செல்லும் பாரியின் வாழ்க்கையில் கண்ணாடிப்பூவாக வருகிறது ருக்மணியின் வரவு. ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கும் பாரி அடிதடியை விடுத்து அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடிவெடுக்கிறான்.

இந்த முடிவின் ஒரு பகுதியாக ஜோஜூவின் சரக்கு ஒன்றையும் கைவசப்படுத்திக்கொள்கிறான். அங்கே ஆரம்பிக்கிறது அப்பா - மகன் மோதல். அந்த மோதல் பாரியை அந்தமான் வரை அழைத்துச் செல்கிறது. அந்த மோதலின் முடிவு என்ன? ருக்மணியை பாரி கைப்பிடித்தானா? சரக்கு யார் வசம் சேர்ந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் ரெட்ரோ படத்தின் கதை!

முதல் பாதியில் இருந்த அழுத்தமும், சுவாரசியமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். குறிப்பாக போருக்கு காரணமான கதை சொல்லல் பகுதி ஆடியன்சோடு கனெக்ட் ஆகாமல் போனது படத்தின் பெரும் பலவீனம். அதனால் இரண்டாம் பாதி முழுக்கவே கடும் அயர்ச்சி. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் பின்னணி இசையுமே படத்தை கைப்பிடித்து கரை சேர்த்து இருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜ் பதிவு

படத்தின் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவரது எக்ஸ் தளத்தில், " திரையரங்குகளில் உரத்த ஆரவாரம், கைதட்டல் மற்றும் அன்பின் நிறைவை எங்களுக்கு வழங்கிய ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் ரெட்ரோவின் முழு குழு சார்பாக எங்கள் இதயங்களின் அடிப்பகுதியில் இருந்து நன்றி !!

இது நல்ல காலத்தின் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைந்ததால் இதைச் சொல்ல வேண்டும்" எனக் குறிப்பிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.