நமிதாவோட அந்த சீன் இருக்கே.. என் கண்ணுலையே நிக்குது போங்க.. தேவயானி குழந்தங்க.. பாக்யராஜ் பேச்சு!
நிழற்குடை: நான் மூன்று பேருக்கு ரசிகன் என இயக்குனர் பாக்யராஜ் கூறியிருக்கிறார். நடிகை நமீதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன் எனவும் கூறினார்.

நிழற்குடை: நடிகை தேவயானி நடித்து வெளியாக இருக்கும் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் நமிதாவோட ஒரு சீன் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது. மேலும் தேவயானி நடிப்பை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நகைச்சுவையாக பேசியுள்ளார்.
இந்த நிழற்குடை என்ற திரைப்படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தேவயானி, வடிவுக்கரசி, கண்மணி மனோகரன், நீலிமா ராணி உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், சீமான், ஆர்.கே. செல்வமணி, நமிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் நடிகை தேவயானி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன் ஆகியோரை பாராட்டி பேசினார்கள். விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசியது சமூக வலைதளங்களில் தியாக பரவி வருகிறது. குறிப்பாக அவர், நமீதா மற்றும் தேவயானி ஆகியோருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என கூறியுள்ளார்.
நான் 3 பேருக்கு ரசிகன்
எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக விளங்கியவர் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ். அதற்குப் பிறகு நான் மூன்று பேருக்கு ரசிகன் என பாக்யராஜ் கூறியிருக்கிறார். நடிகை நமீதாவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன் எனவும் கூறினார். அப்போது அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு மற்றும் அரசியல் முன்னெடுப்புகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் என கூறினார். கடைசியாக நடிகை தேவயானி பற்றி பேசினார்.
மேலும் படிங்க| அஜித் ஷாலினி 25வது திருமண நாள் வீடியோ வைரல்
பாக்யராஜ் முன் நமிதா செய்த சம்பவம்
அப்போது பேசிய பாக்யராஜ், “ஒருமுறை ஒரு சினிமா விழாவில் தான் நடிகை நமீதாவை நான் முதல் முதலில் பார்த்தேன் என பாக்கியராஜ் கூறினார். மேலும், அந்த நிகழ்ச்சிக்கு என் மகன் சாந்தனுவும் வந்திருந்தார். அப்போது நமிதாவை பார்த்ததும் சாந்தனு அவரை டைட்டாக கட்டிப்பிடித்து இருவரும் ஹாய் சொல்லிக் கொண்டனர். அதனை நான் அருகில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பார்த்ததே அவர்கள் இருவரும் பார்த்து விட்டனர்.
அதன் பின்னர் அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் என் மகன் சாந்தனு அப்படியே அங்கிருந்து தப்பித்து விட்டார். இன்றைக்கும் நமீதாவை நான் பார்த்தால் எனக்கு அந்த காட்சி அப்படியே கண்முன் வந்து செல்லும். அவருடைய நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன்” என கூறினார்
மேலும் படிங்க| புலே திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம்
பாசமான முகம் கொண்டவர் தேவயானி
தேவயானி குறித்து பாக்யராஜ் பேசுகையில், “இந்த நிழற்குடை படத்தில் பார்ப்பதற்கு தேவயானி குழந்தை போல அன்பு வடிவமாக காட்சி கொடுக்கின்றார். ஆனால் திரைப்படத்தில் மட்டுமல்ல அவர் நடித்திருக்கும் அனைத்து படங்களிலும் அவரது முகம் எப்போதும் அன்பாகவே காட்சி அளிக்கும். ஏனென்றால் திரையில் அவரது முகத்தை அந்த அளவிற்கு அவர் தெளிவாக வைத்திருப்பார். அவரது முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அந்த முகத்தில் அவர் எப்போதும் அன்போடு வைத்திருக்க அவர் என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இயக்குனர் ராஜகுமாரனுக்கு உண்மையாகவே அந்தப் பெயர் தானா? இல்லை சினிமாவிற்காக வைத்துக் கொண்டாரா என தெரியவில்லை. தேவயானிக்கு சரியான ஆளாக அவர் கிடைத்துள்ளார். இந்த படம் தேவயானிக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை தரும் என நம்புகிறேன்” என கூறினார்.
