மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி
அப்பா இறந்த 2 நாட்களில் நான் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்தேன். அதில், மிகவும் எமோஷனலாக பேசியிருந்தேன். குறிப்பாக நான் நிறைய சோசியல் மீடியாவில் நேரத்தை செலவழித்து விட்டேன்.அப்பாவுடன் இன்னும் நிறைய பேசியிருக்கலாம் - ஜான் மகேந்திரன்!

மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி
பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் மகேந்திரனின் கடைசி கால நினைவுகள் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
பாடி லாங்குவேஜ்
அதில் அவர் பேசும் போது, ‘அப்பா எப்பொழுதுமே சுற்றி இருக்கக்கூடியவற்றை மிக உன்னிப்பாக கவனிப்பார். புத்தகங்கள், சினிமாக்கள் மட்டுமல்ல, ஒருவருடைய பாடி லாங்குவேஜ் கூட நமக்கு ஒரு கதையை தரும் கூறுவார்.
ஒரு நாள் தோட்டக்காரர் ஒருவர் வெளிப்படுத்திய பாடி லாங்குவேஜை பார்த்து, அதனை ஒரு டைரியில், தேதி போட்டு, அவர் என்ன பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினாரோ அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டார். பின்னாளில் அதிலிருந்து ஒரு கதையை அவர் உருவாக்கினார்.