‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?

‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published May 07, 2025 05:30 AM IST

இயக்குநரும் நடிகருமான சேரன், தான் இயக்கிய படம் மக்கள் மத்தியில் தவறான கருத்தை முன்வைத்ததாகவும், அதனால் அந்த படத்தை எடுத்ததற்காக வருத்தப்பட்டதாகவும் பேசி இருக்கிறார்.

‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
கௌரவம் படம்
கௌரவம் படம்

சாதி குறித்த சிறப்பு நிகழ்ச்சி

இந்தப் படத்தின் வெளியீட்டின் போது, விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், படக்குழு சார்பில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அவருடன் சிறப்பு அழைப்பாளராக இயக்குநரும் நடிகருமான சேரன் பங்கேற்று சாதிய அடக்குமுறைகள், சாதிய வெறி குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்திருப்பர்.

சாதி- தேசிய நோய்

அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், " ஒருவேளை சோறு இருந்துட்டு போகட்டும் வாழ்ந்திடலாம். இந்த மனநிலையோடவும் இந்த பயத்தோடவும் வாழ்றவங்க தர்மபுரி சம்பவத்திற்கு பின் பல பகுதிகள்ல இந்த பயம் அதிகமாகிருக்கு. மக்களை மிரட்டுறவனுக்கு ஒரு தைரியம் வந்திருக்கு. பயப்படுறவங்க இன்னும் பயப்பட்டுட்டு இருக்காங்க. எங்கயோ நம்ம சமூகத்துல பயம் ஒரு தேசிய நோயா மாறிடக்கூடாது. நாம அதுக்கு எதாவது பண்ணனும் என ஆணவக் கொலைகளுக்கு பேசி இருப்பார்.

ஆத்திரத்தில் பறிபோன உயிர்

அப்போது பேசிய இயக்குநரும் நடிகருமான சேரன், "அந்த பயம் எனக்கும் ஒரு சமயத்துல அதிகம் ஆச்சு. நான் பாண்டவர் பூமின்னு ஒரு படம் பண்ணுனேன். அந்தப் படத்துல தன் கூடப் பிறந்த தங்கை காதலித்து ஒருத்தனோட ஓடிப் போயிட்டா என்று தெரிந்து ஆத்திரப்படுறான். பின்னாடி அந்தப் பையன் இறந்துட்டான்னு தெரிஞ்சு ஊருக்கு வர்றப்போ ஆத்திரத்துல தன் தங்கையோட தலைய சீவிடுவான்.

பாண்டவர் பூமி படம்
பாண்டவர் பூமி படம்

கொண்டாடிய மக்கள்

இந்த சீன் அப்போ நாங்க யாருமே எதிர்பாக்கல, தியேட்டர்கள்ல அவ்ளோ பெரிய கைதட்டல். ஒரு தங்கச்சிய அண்ணன் வெட்டுனத பாத்திட்டு எல்லா ஊர் தியேட்டர்லயும் கை தட்டுனாங்க. அப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஒருவேளை நான் அந்தப் படத்தை தவறா மக்கள்கிட்ட கொண்டு போய் கொடுத்திட்டனோன்னு. பரிதாபப்பட வேண்டிய இடத்துல, யோசிக்க வேண்டிய இடத்துல கை தட்டிட்டாங்கன்னா அவங்களோட மனநிலை எனக்கு புரியுது.

எல்லோருக்குள்ளேயும் ஜாதி வெறி

ஆத்திரம். எல்லாருக்குள்ளேயும் இருக்குற ஜாதி வெறி. அந்த கௌரவம், அந்த அந்தஸ்து, தான் உயர்ந்தவன், தனக்கு பக்கத்துல யாரும் வரக்கூடாதுங்குற வெறி இருக்குல, இது மனிதனை மனிதனா பாக்காத சமூகத்துல இந்த படத்தை பண்ணினதுக்கு வருத்தப்படுறேன்" என்றார்.

பாண்டவர் பூமி படப்பிடிப்பு தளத்தில் சேரன்
பாண்டவர் பூமி படப்பிடிப்பு தளத்தில் சேரன்

பாண்டவர் பூமி படம்

பாண்டவர் பூமிதிரைப்படம் 2001 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். கிராமப்புற பின்னணியில் குடும்ப உறவுகள் மற்றும் பாசத்தை பற்றி பேசிய இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதினையும் பெற்றது.