‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
இயக்குநரும் நடிகருமான சேரன், தான் இயக்கிய படம் மக்கள் மத்தியில் தவறான கருத்தை முன்வைத்ததாகவும், அதனால் அந்த படத்தை எடுத்ததற்காக வருத்தப்பட்டதாகவும் பேசி இருக்கிறார்.

‘இந்தப் படத்தை எடுத்தது தப்போன்னு நினைக்குறேன்..’ இயக்குநர் சேரனை இப்படி வருத்தப்பட வைத்த படம் எது தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆவணக் கொலைகள் குறித்தும் அவை நாளுக்கு நாள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பேசிய திரைப்படம் கௌரவம். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கியிருப்பார். சிரீஷ், யாமி கௌதம், பிரகாஷ் ராஜ், குமரவேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருப்பார்.
சாதி குறித்த சிறப்பு நிகழ்ச்சி
இந்தப் படத்தின் வெளியீட்டின் போது, விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், படக்குழு சார்பில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அவருடன் சிறப்பு அழைப்பாளராக இயக்குநரும் நடிகருமான சேரன் பங்கேற்று சாதிய அடக்குமுறைகள், சாதிய வெறி குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்திருப்பர்.