கூச்சமாக இருந்தது.. என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா - நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா!
பாலா திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி பாலா 25 விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா என்னை முதல் முதல் புகை பிடிக்க வைத்தது இயக்குனர் பாலா தான். நந்தா படத்தில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வாழ்த்து விதமாக நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் தங்க சங்கிலியை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பால இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் பாலாவின் 25 மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது
இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், “2000 ஆம் ஆண்டு நெய்காகாரப்பட்டியில் படப்பிடிப்பு ஒன்றில் இருக்கும் பொழுது ஒரு அழைப்பு வந்தது சூர்யா நீ எந்த ஒரு படமும் கமிட் பண்ணிக்க வேண்டாம் நாம் அடுத்து படம் பண்ணுவோம் என்று சொன்னார். அந்த போன் காலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது.