கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்துப்பிள்ளை.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா
கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்து.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா

கங்கையில் தூக்கி எறியப்படும் பிணத்துக்காக காத்திருந்த அகோரி.. சிறுவயதில் தத்துப்பிள்ளை.. வலிகளை சொன்ன இயக்குநர் பாலா
சமீபத்தில் இயக்குநர் பாலா, திரைத்துறையில் அறிமுகமாகி 25ஆண்டுகள் ஆன விழாவும் வணங்கான் படத்தின் விழாவும் கொண்டாடப்பட்டது.
இதில் நடிகர் சிவகுமார் இயக்குநர் பாலாவிடம் மேடையில் வைத்து மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறு கேள்விகளையும் கேட்டார். அதற்கு இயக்குநர் பாலா பதில் அளித்துள்ளார். அதன் தொகுப்பு இது.
கேள்வி: மயான ஊழியர், பிச்சைக்காரர், திருடர், பரதேசி.. உங்கள் படத்தில் வரும் கேரக்டர் எல்லாமே இப்படி தான் இருக்காங்க. நீங்கள் காதல் படம் எடுத்தால் கூட கடைசியில் பைத்தியம் ஆகிடுறான். அழுக்கு இல்லாமல் டீசன்ட்டான ஒரு படம் எடுக்கமாட்டீங்களா?
