வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜயை நடிக்க வைத்தது ஏன்? - ஓப்பனாக பேசிய இயக்குநர் பாலா!
அவர்தான் மிக மிக அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் அருண் விஜய் என்று கூறினார். இதனையடுத்து நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசினேன் - பாலா!
வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசும் பொழுது, ‘ஏ எல் விஜய் அருண் விஜய்யுடன் பணியாற்றி இருக்கிறார். அவர்தான் மிக மிக அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் அருண் விஜய் என்று கூறினார். இதனையடுத்து நான் அருண் விஜயை நேரடியாக சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு மிக மிக பிடித்தது. அதனால் இவருடனே நாம் பணியாற்றலாம் என்று முடிவு செய்து வணங்கான் திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தேன்’ என்றார்
முன்னதாக, தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. தொடர் தோல்விகள், பர்சனல் பிரச்சினைகள், நெகட்டிவான விமர்சனங்கள் என தன்னுடைய கேரியரின் மோசமான காலக்கட்டத்தில் இருக்கும் பாலா, சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் படப்பிடிப்பில் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேற, சூர்யா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் அருண்விஜயை கதாநாயகனாக வைத்து வணங்கான் படத்தை எடுத்து இருக்கிறார்.
இந்தத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அந்த படம் தொடர்பாக பாலா கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில், அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேசும் போது, ‘ எனக்கு உடலுக்கு கேடுவிளைவிக்கக்கூடிய சில தவறான பழக்க வழக்கங்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் நான் அதன் உச்சத்தை தொட்டேன். விளைவு, உடல்நிலை மோசமாகி நிலைதடுமாற ஆரம்பித்து விட்டேன். என் குடும்பத்தினர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கப்போகிறான். அவன் இஷ்டப்படி இருந்து விட்டு போகிறான் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
7 நாட்கள் தூக்கம்
ஒரு முறை உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் என்னை அனுமதித்திருந்த போது, போதையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் தூங்கிக்கொண்டே இருந்தேன். நான் விழித்த பார்த்த போது என்னிடம் அதைச் சொன்னார்கள். அந்த நேரம்தான் இந்த சனியனை எப்படியாவது விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
இதற்கிடையே, வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி வந்தது. படிப்பு பெரிதாக இல்லை. அப்போது, சினிமாவில் யார் வேண்டுமென்றாலும் சேரலாம்; உழைப்பு மட்டும் இருந்தால் போதும் என்பது தெரிந்தது. இதையடுத்துதான் நான் சினிமாவிற்கு முயற்சி செய்தேன். பாலு மகேந்திராவிடம் தான் சேர வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக போராடி, அவருடன் உதவி இயக்குனராக சேர்த்தேன்.
சினிமாவிற்கு சேரும் பொழுது நாய் படாத பாடு பட போகிறேன் என்று நினைத்தேன். என் நண்பனிடம் இதுகுறித்து கேட்டேன். அவன் நீ நாய் படாத பாடு பட மாட்டாய்; சொறி நாய் படாத பாடு படுவாய் என்றான்; உண்மையில் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்