புதுவித நோய்.. காப்பி பட விமர்சனத்திற்கு பதிலடி.. டாக்டரான உடன் சம்பவம் செய்த அட்லி..
சத்யபாமா பல்கலைகழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பின், இயக்குநர் அட்லி அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

இயக்குனர் அட்லிக்கு சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த விழாவில் பேசிய அவர், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் படம் மற்றும் பல விஷயங்கள் குறித்து பேசினார். மேலும் தனது படங்கள் காப்பி செய்யப்பட்டவை என்ற விமர்சனத்திற்கும் பதிலளித்தார்.
புதுவித நோய்
அட்லி தனது படங்கள் குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்தார். அட்லி தனது படங்களில் வரும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் காப்பியடிக்கப்பட்டவை என்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களைப் பற்றி பேசினார். அவர் கூறியதாவது: கொஞ்ச நாளாவே எனக்கு பொய் சொன்னா இருமல் வருது. அதுனால பொய் சொல்லாம பேச ட்ரை பண்றேன் என்றார். அதற்கு முன்னதாக. நிகழ்ச்சியில் அவர் தமிழில் பேசிய நிலையில், தமிழ் மொழி புரியாதவர்களிடம் அனுமதி கோரினார்.