Allu Arjun: தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன?
Allu Arjun: அல்லு அர்ஜுன் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி ஆகியோர் மீது, இல்லத்தில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தை அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறினாரா அல்லு அர்ஜூன்? - பாய்ந்தது வழக்கு - பின்னணி என்ன? (Instagram)
Allu Arjun: ஆந்திர மாநில எம்.எல்.ஏ ஷில்பா ரவி சந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக, நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திராவின் நந்தியாலாவுக்குச் சென்றார். பின்னர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ ரவி சந்திர கிஷோர் ரெட்டி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ஷில்பா ரவி சந்திரகிஷோர் ரெட்டி ஆகியோர் நேற்று(மே 11) ரெட்டியின், இல்லத்தில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடத்தை விதிமீறல் நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் நாளை மே 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.