Top Cinema News: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு.. மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் - இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Today: நடிகை வீட்டில் வைர நகை திருட்டு, மீண்டும் கார் பந்தயத்தில் அஜித், தொழிலதிபர் வீட்டில் நடிகை புகார், ஹான்சிகா மீது நாத்தனார் புகாரால் வழக்குப்பதிவு உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
இந்த வார வெள்ளிக்கிழமை பொங்கல் ரிலீஸ் படங்களாக கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் வர இருக்கின்றன. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் தமிழில் மதகஜ ராஜா, காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இதுதவிர கேம் சேஞ்சர் படமும் ரிலீஸாகிறது.
பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்களின் புரொமோஷன்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அஜித்குமார் பிறந்தநாளான மே 1 தேதி வெளியாகிறது. இதன் டைட்டில் டீஸர் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமும் 2025இல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது.
பிறந்தநாளில் யாஷ் பட ட்ரெய்லர் ரிலீஸ்
கேஜிஎஃப் மாபெரும் வெற்றிக்கு பிறகு கன்னட நடிகர் யாஷ் நடித்து வரும் புதிய படம் டாக்ஸிங். ஜனவரி 8ஆம் தேதியான இன்று யாஷ் பிறந்தநாளாக இருந்து வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக டாக்ஸிக் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படம் தவிர பாலிவுட்டில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் யாஷ்.
நடிகை வீட்டில் வைரம் திருடியவர் கைது
பாலிவுட் சினிமாவில் 1980களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் பூனம் தில்லான். மும்பையில் வசித்து வரும் பூனம் தில்லான் தனது வீட்டில் இருந்து ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள வைர கம்மல் மற்றும் 500 அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டிருப்பதாக போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கடந்த மாதம் நடிகை வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த நபர்களில் 37 வயதாகும் சமீர் அன்சாரி என்பவர் வீட்டின் அலமாரியில் இருந்த வைர நகையை திருடியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், 500 அமெரிக்க டாலர்கள் மற்றும் வைர கம்மலை மீட்டனர். திருடப்பட்ட பணத்தில் தன்னுடன் பெயிண்ட் அடித்த குழுவுக்கு விருந்து கொடுப்பதற்காக அவர் ரூ 9 ஆயிரம் செலவிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்துக்கு பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கிய அஜித்
'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கிய அஜித்குமார், துபாயில் கார் ரேசிங்ரகில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. அதன் விடியோ வெளியாகி வைரலானது.
விபத்துக்கு அஜித்துக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், அவர் ஓட்டிய காரின் முன் பகுதி மிகுந்த சேதம் அடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக இன்று நடந்த தகுதிச் சுற்றில் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டியுள்ளார். அதே போல் நாளை நடக்கும் கார் அணிவகுப்பிலும் அவர் பங்கேற்பார் என அஜித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
காதலர் தின ஸ்பெஷலாக வெளிவரும் சுசீந்திரன் படம்
சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கும் ரெமாண்டிக் படம் 2கே லவ் ஸ்டோரி. பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இந்த படம் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் ரேசில் இருந்து விலகியது. 2கே தலைமுறையினரின் காதல், நட்பு போன்ற விஷயங்களை சொல்லும் விதமாக உருவாகியிருக்கும் படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச பேச்சு புகார் - மலையாள நடிகை புகாரால் தொழிலதிபர் கைது
மலையாள நடிகையான ஹனி ரோஸ் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் இரட்டை அர்த்த வசனத்தில் பேசியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது அங்கு வருகை தந்த கோபி செம்மனூர் தன்னை அவமதிக்கும் விதத்தில் அநாகரிகமாக பேசியதாக புகார் அளித்துள்ளார்.
மற்றும்மொரு நிகழ்ச்சியில் போபி செம்மனூர் இதே பாணியில் பேசிய நிலையில் அவருடைய அநாகரிமான பேச்சுக்கு பதிலடியாக அந்த தருணத்தில் சபை நாகரிகம் கருதி பதில் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஹனி ரோஸ் அளித்த புகாரின் பேரில் போபி செம்மனூர் மீது ஐபிசி பிரிவு 75, பிரிவு 67 உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஹனி ரோஸுக்கு மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் அம்மா ஆதரவு தெரிவித்துள்ளது
விஷால் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்
விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உலா வரும் தகவல் வதந்தியே. மருத்துவர் ஆலோசனைப்படி அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
வைரஸ் காய்ச்சல் காரணமாக அவருக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்ட, சற்று சோர்வாக காணப்படுகிறார். இன்னும் ஓரிரு நாள்களில் முழுமையாக குணமடைந்து தனது அன்றாட பணிகளை அவர் மேற்கொள்வார் என விஷாலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரவுக்கு எதிரான தனுஷின் வழக்கு ஒத்திவைப்பு
நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் தனது நிறுவனம் தயாரித்த நானும் ரெளடிதான் பட காட்சியை பயன்படுத்தியதாக, நயன்தாரா மீது தனுஷ் தாக்க செய்த உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22ஆம் தேதி ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹான்சிகா மீது நாத்தனார் புகார்
நடிகை ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அவரது அண்ணி போலீசில் புகார் அளித்துள்ளார். ஹன்சிகா சகோதரர் பிரசாந்த் மேத்வானி மனைவியான முஸ்வான் நான்சி ஜேம்ஸ் அளித்த புகாரில் தனக்கு எதிராக வேலைகள் செய்து மண வாழ்ககையை முறிக்க பார்ப்பதாக கடந்த டிசம்பரில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 498ஏ, 323, 504, 506, 34இன் கீழ் வழக்கு பதிவு செயய்ப்பட்டுள்ளது.
தளபதி 69 படத்தில் அசுரன் பட நடிகர்
அசுரன் படத்தின் தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜே அருணாச்சலம், தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தில் அவர் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கிறார். தற்போது அவர் படக்குழுவுடன் இணைந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.