வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு
வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரது விவாகரத்து வழக்கிலும் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்:
நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஷ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனம் ஒத்து பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தாலும் தனது மகன்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் ஆஜர் ஆகி அவர்களை பிரிவு பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் பரஸ்பர முறையில் இருவரும் பிரிவதாக விவகாரத்துக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.