மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி.. சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார்.. தேவதர்ஷினி ஓபன் டாக்
மர்மதேசம் செய்யுறப்போ வந்த வதந்தி பற்றியும்; சேத்தன் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிடுவார் என்பது குறித்தும் நடிகை தேவதர்ஷினி ஓபன் டாக் ஆகப் பேசியுள்ளார்.

வரும் அக்டோபர் 25ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஐந்தாம் வேதம் என்னும் வெப் சிரீஸ் ரிலீஸாகவுள்ளது. இதனை மர்ம தேசம் டிவி சீரியலை இயக்கிய நாகா இயக்கியிருக்கிறார். இந்நிலையில் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி பிஹைண்ட்வுட்ஸ்-க்கு பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியின் தொகுப்பு
எல்லோரும் ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ்-க்கு காத்திருக்காங்க. அதுபற்றி?
பதில்: இயக்குநர் நாகா சார் உடன் நான் முதலில் வொர்க் செய்தது ‘மர்ம தேசம்’. அதன்பின் தான் ரமணி வெர்சஸ் ரமணி தொடரில் நடிச்சேன். மர்ம தேசம் போன்ற டிவி சீரியல்களில் கட்டுக்கதை, திரில், அமானுஷ்யம் இருக்கும். ஐந்தாம் வேதமும் கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஜானர் தான். நாகா சாரின் பேவைரட் ஜானர் அது.
காமெடி சினிமாவுக்கு வேண்டும் என்று சொல்லியிருக்கீங்க. அதை இந்த சிரீஸில் எதிர்பார்த்தீங்களா?
பதில்: ஸ்கிரிப்ட்டுக்கு ஸ்கிர்ப்ட் வித்தியாசம் ஆகுக் இல்லையா. ரொம்ப உண்மைபோலவே இருக்கும் இந்த கேரக்டர்கள் எல்லாம். மர்மதேசம் மாதிரியான கதை இல்லையா, அதனால் எனக்கு தான் நாகா சார் முதலில் கால் செய்து நடிக்க அழைத்தார். நாகா சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது என்பதுவே என் வயது ஒத்த நடிகர்களுக்கு வரப்பிரசாதம். அதனால் அதை விடவில்லை.