Devayani: ‘பார்த்திபனை எச்சரித்த தேவயானி அம்மா’ முதல் நாளே நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்த ராஜகுமாரன்!
Devayani: ‘‘எனக்கு யாராலும் எந்த தொல்லையும் இல்லை. நான் என் விருப்பத்தில் தான் முழு ஷூட் எடுத்தேன். மார்ச் ஷூட் தொடங்கினோம், மே மாதம் 8 ம் தேதி அஜித் சார் ஷூட்க்கு வந்தார். அந்த நேரத்தில் மே 1ம் தேதி வாலி ரிலீஸ் ஆகியிருந்தது’’

Devayani: ‘பார்த்திபனை எச்சரித்த தேவயானி அம்மா’ முதல் நாளே நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்த ராஜகுமாரன்!
நடிகை தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன், டூரீங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘நீ வருவாய் என ஸ்டார்ட் பண்ணி, முதல் ஷெட்யூல் எல்லாமே பார்த்திபன் சாருக்கும், தேவயானிக்கும் தான். பார்த்திபன் சார் எப்படினா, படங்களில் நிறைய தலையிடுவார். வேற படமாக இருந்தாலும் கூட டைரக்ஷன், வசனம் எல்லாத்திலும் தலையிடுவார். கொஞ்சம் இறங்கி செய்வார். இதெல்லாம் தேவயானிக்கு நல்லாவே தெரிந்திருந்தது.
தேவயானி அம்மா எச்சரிக்கை
அவர்கள் ஏற்கனவே படம் நடித்திருந்தார்கள் என்பதால், பார்த்திபன் பற்றி தேவயானியின் அம்மாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. முதல் நாள் ஷூட், பார்த்திபன் சார், ரமேஷ் கண்ணா இரண்டு பேரோடும் சீன். இரண்டு பேருமே இயக்குனர்கள். அப்போ தான் ரமேஷ் கண்ணா டைரக்ஷனில் தொடரும் படம் தேவயானி பண்ணிருந்தாங்க.