புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அன்பு, ஆனந்தி மீது மகேஷ் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்க மகேஷ் அம்மாவும் மித்ராவும் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

புதிய பிரச்சனையில் அன்பு ஆனந்தி.. மகேஷிடமிருந்து தப்புவார்களா? சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில், ஆனந்தியை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் தங்க வைத்ததால் கோவத்தில் இருந்த அவரது அம்மா அன்புவை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், அன்பு, ஆனந்தியை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்ததை பார்த்த மித்ரா அதுகுறித்து மகேஷின் அம்மாவிற்கு தகவல் கொடுக்கிறார். அப்போது, அன்புவிற்கும் ஆனந்திக்கும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. இதுபற்றி நாம் மகேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என இருவரும் திட்டம் தீட்டுகின்றனர்.
காத்திருக்கும் மித்ரா
அதன்படியே, மித்ரா கார்மெண்ட்சில் வேலை செய்யும் அன்புவும் ஆனந்தியும் எப்போது தனியாக பேசுவார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார். அத்துடன் சமயம் பார்த்து மகேஷிடம் இந்தத் தகவலைக் கூறவும் தவித்து வருகிறார்.