கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்

கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 09, 2024 06:48 AM IST

கயலையும் தன்னையும் பிரிக்க இத்தனை நாளாக அம்மா சிவசங்கரி போட்ட திட்டத்தை அறியும் எழில் அம்மா மீது மிக கோவமாக இருக்கிறார்.

கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்
கயலுக்கு எதிரான அம்மாவின் சூழ்ச்சியை அறிந்த எழில்.. ஆத்திரத்தில் எடுக்கப் போகும் முடிவு என்ன? கயல் சீரியல் அப்டேட்

அங்கு கயலின் அப்பா பெயரை சொல்லி நடக்கும் பல பிரச்சனைகளை சமாளித்து வந்த நிலையில்,சரவண வேலுவுடன் ஊர் சுற்றி பார்க்கச் சென்ற கயலுக்கும் எழிலுக்கும் ஆபத்து வருகிறது.

கத்திக்குத்துடன் சிகிச்சை

சரவண வேலு, திட்டம்போட்டு, கயலிடமிருந்து எழிலைப் பிரிக்க அடியாட்களை வைத்து எழிலை கத்தியால் குத்தினான். இதில் படுகாயமடைந்த எழில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

அந்த சமயத்தில் கயல் எழிலுக்காக கோயிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு வர நினைத்து கிளம்பினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா எழிலை மருத்துவமனையில் இருந்து கடத்தினார்.

சரவண வேலுவை சந்தேகப்படும் கயல்

இதுபற்றி எதுவும் தெரியாமல் மருத்துவமனைக்கு வந்து பார்த்த கயலுக்கு அதிர்ச்சி தாங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் சமயத்தில் சரவண வேலுவிடம் அவரது சித்தப்பா பேசியதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த கயல் அவரை போலீசிடம் பிடித்து கொடுத்தார்.

இதையடுத்து, எழிலை எங்கு கடத்தி வைத்திருக்கிறாய் எனக் கேட்டு போலீசாரும் சரவண வேலுவை அடி பிரித்து மேய்கிறார்கள். ஆனால், சரவண வேலு தான் எழிலை கடத்தவில்லை என திரும்ப திரும்ப கூறினார்.

அம்மாவின் திட்டத்தை அறியும் எழில்

அதே சமயத்தில் தீபிகா, தான் கடத்தி வந்த எழிலிடம் கயலை விட்டுவிட்டு தன்னுடன் வந்து வாழுமாறு கட்டாயப்படுத்தினார். அதற்கு எழில் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து தப்ப முயன்றார்.

அந்த சமயத்தில் தீபிகாவிற்கு எழில் அம்மா போன் செய்தார். அதை எடுத்தது எழில் எனத் தெரியாமல் இதுவரை கயலையும் எழிலையும் பிரிக்க போட்ட திட்டங்கள் அனைத்தை பற்றியும் பேசுகிறார்.

இதைக் கேட்டு மனமுடைந்து அழுத எழில் அங்கிருந்து தப்பித்து வந்த எழில், கயலிடம் அத்தனை உண்மைகளையும் கூறுகிறான். பின் கயல் குடும்பம் மொத்தமும் கயலின் ஊரில் இருந்த கிளம்புகின்றனர்.

கயலுடன் தனது வீட்டிற்கு வந்த எழில் அவரது அம்மாவிடம் எப்படி நடந்து கொள்வார். இனி என்ன நடக்கும். அவர் கயல் பக்கம் நிற்பாரா அல்லது அவர் அம்மாவின் பக்கம் நிற்பாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

உன் புருஷன் ஓடி போயிட்டான்

முன்னதாக தீபிகா தான் எழிலை கடத்தினாள் என்பதை ஏதும் அறியாத கயல், சரவண வேலு மேல் கோவமாக இருக்கிறார். கயல் தன் பிள்ளையை போலீசில் பிடித்து கொடுத்ததால், கோவமடைந்து, உன் புருஷன் எவ கூடவோ ஓடி போயிட்டான். அவன தடுக்க துப்பு இல்ல. என் புள்ளைய இப்படி கஷ்டப்படுத்துற என கயலை மேசமாக திட்டினாள்.

இவ கொன்னுடுவா

அதே சமயத்தில் சரவண வேலுவிடம், கயல் அப்பா, உன் அப்பாவை கொலை செய்த மாதிரி, இவ உன்ன கொன்னுடுவா என கூறி சண்டைக்கு நிற்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.