போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்
கயல் சீரியலில் எழிலை மருத்துவமனையில் இருந்து கடத்தியது சரவண வேலு தான் என தெரிந்த கயல், அவர் மீது போலீஸில் புகாரளித்ததால் அவரை போலீஸ்காரர்கள் கொடுரமாக அடித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் பிரித்து மேயப்படும் சரவண வேலு.. கயலிடம் கெஞ்சும் நண்பர்.. கயல் சீரியல் அப்டேட்
சொந்த ஊருக்கு பொங்கல் வைக்க வரும் கயல் குடும்பத்திற்கு ஊரை சுற்றிலும் பிரச்சனை வருகிறது. இதை எல்லாம் சமாளித்த கயல், பிரச்சனைகளை இன்னும் ஒரு வருடத்தில் முடித்து வைப்பதாகக் கூறி அனைவரையும் சமாதானம் செய்தார்.
எழிலுக்கு கத்திகுத்து
இதையடுத்து, அவருடன் நட்பாக பழகும் சரவண வேலுவை நம்பி கயலும் எழிலும் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். அங்கு கயலை அடைய தடையாக இருக்கும் எழிலை சரவண வேலு திட்டம் தீட்டி முகமூடி ரவுடி கும்பலை வரவைத்து தாக்குகிறான். அதில், எழில் கத்திக்குத்து பட்டு சுருண்டு விழுகிறான்.
காணாமல் போன எழில்
இதையடுத்து, எழிலை கயலும் சரவண வேலுவும் சேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில், கயல் நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டு, வருவதற்குள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எழிலைக் காணவில்லை.
