மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

Malavica Natarajan HT Tamil
Dec 31, 2024 07:01 AM IST

மித்ரா தான் தன் வீட்டு மருமகள் என மகேஷின் அம்மா மித்ராவிற்கு வாக்கு கொடுத்துள்ளார்.

மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..
மித்ராவிற்கு உறுதி அளித்த மகேஷ் அம்மா.. தவிப்பில் அன்பு, ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..

இதையடுத்து, அன்புவிற்கு இத்தனை நாள் ஆறுதல் சொல்லி வந்த ஆனந்தி தற்போது தீர்க்கமான முடிவையும் எடுத்துள்ளார். அன்பு அம்மாவின் வாயாலேயே அவர் தன்னை மருமகள் என சொல்லும் நாள் வரும் வரை தான் ஓய மாட்டேன் என அன்புவிடம் தன் நண்பர்கள் முன் சவால் விட்டுள்ளார் ஆனந்தி.

மகேஷின் அறிவிப்பு

இதற்கிடையில், இந்நிலையில், கார்மெண்ட்சில் வேலை செய்பவர்களை சந்தித்த மகேஷ் தன் பிறந்த நாள் குறித்த அறிவிப்பை கூறினார்.

மேலும், அந்த நாளில் ஒரு முக்கியமான அறிவிப்பையும் கூறுவதாக அறிவித்தார். அதற்கு கம்பெனியில் வேலை செய்த நபர் ஒருவர் உங்கள் கல்யாண அறிவிப்பா எனக் கேட்க அது சஸ்பென்ஸ் எனக் கூறி உள்ளார். மகேஷின் இந்த வார்த்தைகளால் அன்பு, ஆனந்தி, அவர்களின் நண்பர்களான முத்து, சௌந்தர்யா போன்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், ஆனந்தி, தன்னை அவர் காதலிப்பதாக மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக மகேஷை விட்டு தள்ளியே இருந்து வருகிறார்.

மகேஷை காதலிக்கும் மித்ரா

இது இப்படி இருக்க, மகேஷின் அம்மா மித்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது, மித்ராவிடம் யாரையாவது காதலிக்கிறியா எனக் கேட்க மித்ராவும் தயங்கி தயங்கி மகேஷை காதலிப்பதாக சொல்கிறார். இதையடுத்து மகேஷின் அம்மா மித்ராவையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன சொல்வது எனத் தெரியாமல் மித்ரா அழுதுகொண்டே நிற்கிறாள்.

உறுதியளித்த மகேஷ் அம்மா

இந்த சமயத்தில் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த மகேஷின் அம்மா மித்ராவிற்கு வாக்கு கொடுத்துள்ளார். அதாவது இனி என் வீட்டு மருமகள் நீ தான் எனக் கூறி அழுது கொண்டிருந்த மித்ராவை சமாதானம் செய்தார். இப்படி ஒரு பதிலை எதிர்பாராத மித்ரா சந்தோஷக் கடலில் திளைத்து வருகிறார்.

நிலமை இப்படி இருக்க, வேலை முடித்த பின் அன்புவை சந்தித்த மகேஷ் நாளைக்கு நடக்கும் பர்த்டே பார்ட்டியில் என்னோட காதலை ஆனந்தியிடம் சொல்லப் போகிறேன் என உணர்ச்சி பொங்க பேசினார். இதைக் கேட்டும் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அன்பு தவித்துப் போய் நிற்கிறான்.

இதையடுத்து அன்பு, மகேஷ் சொன்னதை ஆனந்தியிடம் கூறி தன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறான். இதைக் கேட்ட ஆனந்தி, நாமே போய் மகேஷ் சார்கிட்ட நம்ம காதல சொல்லி விட்டால் அவரே நமக்கு விட்டுக் கொடுத்துவிடுவார் என ஐடியா கொடுக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அன்பு என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் தவித்து வருகிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.