வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்

வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 30, 2024 08:10 AM IST

அன்பு- ஷாலினி திருமணம் நடக்காது என கயலின் அம்மா ஷாலினியிடம் கூறிய நிலையில், அன்பு ஷாலினியை அவரது வீட்டில் இருந்து கூட்டிச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளான்

வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்
வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த அன்பு- ஷாலினி.. போற இடம் எல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படி? கயல் சீரியல் அப்டேட்

நகையை திருடும் கௌதம்

அங்கு, இத்தனை நாள் தன்னை மதிக்காமல் இருந்த கயலை பழிவாங்கும் நோக்கில் டாக்டர் கௌதம், கயலுக்கு பல நெருக்கடிகளையும் அவமானங்களையும் தருகிறான். இத்தனைக்கும் நடுவில், கயல் அவரது தங்கைக்கு வளைகாப்பு செய்ய ஆசைப்பட்டாள். அதற்காக குடும்பத்தினருடன் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், தங்கைக்கும் அவரது கணவருக்கும் நகை வாங்க சென்ற போது, டாக்டர் கௌதம் ஆட்களை வைத்து கயலிடம் இருந்து நகையை திருடி விட்டான்.

கயலுக்கு வந்த அடுத்த பிரச்சனை

இதனால், தன் அலட்சியத்தால் வீட்டில் பிரச்சனை வெடிக்கப் போகிறது என நினைத்து கயலும், மூர்த்தியும் பதற்றத்தோடு நகைத் திபருடர்களை தேடி ஒருவழியாக அதை கண்டுபிடித்தனர். பின் போலீசார் உதவியுடன் நகையையும் மீட்டனர். இதையடுத்து, பிரச்சனை எல்லாம் முடிந்தது என நினைத்தால் அன்புவும் ஷாலினியும் வீட்டை விட்டு ஓடிப்போய் அடுத்த பிரச்சனையை இழுத்துள்ளனர்.

காதலுக்கு பச்சை கொடி

அன்புவும் ஷாலினியும் காதலிப்பதை அறிந்த கயல், அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி தான் காட்டினார். ஆனால், கையில் வேலையை வைத்துக் கொண்டு தான் ஷாலினி அம்மாிடம் பேச வேண்டும். அதனால், போலீஸ் வேலைக்கு போஸ்டிங் வந்த பின் இதைப் பற்றி பேசலாம் என கயல் அன்பு, ஷாலினி இருவருக்கும் நம்பிக்கை அளித்தார்.

கோவமடைந்த வேதவள்ளி

ஆனால், அதற்குள்ளாக சிவசங்கரியின் சூழ்ச்சியால் குழம்பி இருந்த வேதவள்ளி அன்புவும் ஷாலினியும் ஒருவேளை காதலித்தார்கள் என்றால் என்ன செய்வது எனத் தெரியாமல், தங்கையின் வளைகாப்பு குறித்து பேச வந்த இடத்தில் ஷாலினியின் கல்யாண ஏற்பாடுகள் குறித்து பேசினார். அப்போது வேதவள்ளியின் திட்டத்தை அறிந்துகொண்ட கயல், வம்படியாக அன்பு போலீஸ் ட்ரெயினிங் முடித்து போஸ்டிங் வாங்கிவிட்டால் அடுத்தது ஷாலினியுடன் தான் திருமணம் செய்ய இருக்கிறோம் எனக் கூறினார்.

வீட்டை விட்டு ஓடிய அன்பு- ஷாலினி

இதைக் கேட்டு ஷாக் ஆன வேதவள்ளி, கயலையும் அவரது அம்மாவையும் ஷாலினி கல்யாணம் குறித்து பேச வேண்டாம் எனக் கூறி எச்சரித்தார். இதனை கயலின் அம்மா ஷாலினியிடம் கூற அவர் பதற்றத்திலேயே இருந்தார். இந்நிலையில், ஷாலினி கயலின் அம்மா கூறியதை அப்படியே அன்புவிடம் கூறி நிலைமையை எடுத்துச் சொல்லி உள்ளார். இதனால் ஷாலினி வீட்டிற்கு கிளம்பி வந்த அன்பு, அவரை கூட்டிக் கொண்டு சென்று கல்யாணம் செய்ய கிளம்பிவிட்டார். இதை அறிந்த கயல் அன்புவை தடுக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.