கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் தன் மீது விழுந்த பழியை நீக்கி உண்மையை நிரூபிக்க ஒரு மாதம் சாமுண்டீஸ்வரியிடம் அவகாசம் கேட்டுள்ளார் கார்த்திக்.

கார்த்திக் மீது பழி போட்ட மகேஷ்.. வீட்டை விட்டு துரத்தும் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி மகேஷை ரிலீஸ் செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மகேஷிற்கு ஐடியா கொடுக்கும் சிவனாண்டி
சிவனாண்டி மகேஷிடம் நீ அந்த சாமுண்டீஸ்வரி வீட்ல தான் இருக்கணும். இப்போ நிச்சயதார்த்தத்துக்கு போய் போன் பேச போயிருந்தேன் அங்க மயங்கி விழுந்துட்டேன் என்று சொல்லு என சொல்கிறான்.
உடனே மாயா மயங்கி விழுந்ததற்கு காரணம் கார்த்திக் தான் என்று அவன் மீது பழி போட சொல்கிறாள். கார்த்திக் நிறைய குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டான். அவனை அந்த வீட்ல இருந்து விரட்டணும் என சொல்கிறாள்.
