ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்
6 மாதமாக சிறையில் இருக்கும் ஆதி குணசேகரனை எப்படியாவது வெளியில் எடுக்க அவரது தம்பிகள் போராடும் நிலையில், ஈஸ்வரியை வரவைக்க விசாலாட்சி திட்டம்

ஜெயிலில் தவிக்கும் ஆதி குணசேகரன்.. பிள்ளையை காப்பாற்ற திட்டம் போடும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் 2 அப்டேட்
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமயலறையிலேயே கிடந்த பெண்கள் அவர்களுக்கென வேலையை தேடி அதை செய்ய ஆரம்பித்தனர்.
ஆதி குணசேகரனுக்காக பேசும் சொந்தங்கள்
இதனால், வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த ஆதிரையின் கணவர் கரிகாலன் தான் சமைப்பது, தேவையான வேலைகளை செய்வது என எடுபிடியாக இருந்து வருகிறார். நிலைமை இப்படி இருக்க, ஆதி குணசேகரனின் சொந்தங்கள் சிலர், ஏன் இன்னும் குணசேகரனை பெயிலில் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
