கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

Malavica Natarajan HT Tamil
Dec 21, 2024 07:29 AM IST

சிங்கப்பெண்ணே சீரியலில், அன்புவின் அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்யலாம் என காத்திருந்த ஆனந்திக்கு தன் காதலை சொல்லி ஷாக் கொடுக்கிறார் மகேஷ்.

கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
கேட்டது ஒன்னு.. கிடைச்சது ஒன்னு.. ஆனந்தியை சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்

மட்டம் தட்டும் கருணாகரன்

இதனால், ஆரம்பத்தில் இருந்தே ஆனந்தியை இந்தக் கம்பெனியில் இருந்து வெளியேற்ற பல முயற்சிகளை செய்கின்றனர். அதுமட்டுமின்றி, கார்மெண்ட்ஸில் டைலர் வேலைக்கு வந்த ஆனந்தியை மட்டம் தட்டி வேறு வேலைக்கு அமர்த்துகிறார். இவை எதுவும் அறியாமல் இருந்த கம்பெனியின் ஒனர் மகேஷிற்கு மெல்ல மெல்ல ஆனந்தி மேல் காதல் வந்தது. இதை தன் தோழி மித்ராவிடம் சொல்ல, அவள் மேலும் ஆனந்தி மீது கோவமடைகிறார்.

சவாலில் வென்ற ஆனந்தி

இதற்கிடையில், ஆனந்தியை கம்பெனியை விட்டு விரட்ட நினைத்தால், அவரை ஏன் டைலராக வேலை செய்ய விடவில்லை என மகேஷ் கேட்க அப்போதே நடத்தப்பட்ட போட்டியில் அதிக துணிகளை தைத்து சதித் திட்டங்களுக்கு மத்தியிலும் ஜெயித்தார் ஆனந்தி. இவர், போட்டியில் தான் கலந்து கொள்ளக் கூடாது என நினைத்து மித்ரா ஹாஸ்டலில் வழுக்கி விழ வைத்து தன் கை காலைகளை உடைத்த போதும் கூட போட்டியில் ஜெயிக்க வேண்டும் என பாடுபட்டு ஜெயித்தார்.

மகேஷ் தரும் பரிசு

இந்நிலையில், அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது இன்னும் மகேஷுக்கு தெரிய வராததால் எப்போதும் போல் தனது காதலுக்கு அன்புவை நாடுகிறார். போட்டியில் ஜெயித்த ஆனந்திக்கு பரிசு தர எண்ணிய மகேஷ் அன்புவிடம் சென்று உதவி கேட்டான். அப்போது, ஏற்கனவே நான் கொடுத்த பரிசை ஆனந்தி, அழகன் கொடுத்ததாக நினைத்து விட்டாள். அதனால் இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

சமாதானம் செய்யும் அன்பு

அன்புவிடம், ஆனந்தி, நீங்கள் எனக்கு எவ்வளவோ உதவி செய்கிறீர்கள் ஆனால் எனக்கு தான் எதுவும் சரியாக வரவே இல்லை என்று கூறி கவலைப்படுகிறார். வழக்கம்போல் அன்பு தனது ஆசை காதலி ஆனந்தியை சமாதானம் செய்து உணவை ஊட்டி விட்டார். அந்த நேரம் பார்த்து மகேஷ் அன்புவைத் தேடி வர அவர்கள் இருவரும் எப்படியோ நிலைமையை சமாளித்தனர்.

அன்பு அம்மாவின் பிளான்

இதற்கிடையில், ஆனந்தியை தனக்கு தெரியாமல் அன்பு வீட்டிற்குள் தங்க வைத்ததில் இருந்து அவரது அம்மாவிற்கு சொல்ல முடியாத கோவமும் வருத்தமும் அன்பு மேல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அத்துடன் ஆனந்தியிடமிருந்து தன் மகனை பிரித்து அன்புவின் மாமா பெண்ணிற்கே திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டி உள்ளார்.

இதற்காக அவர்களை வீட்டிற்கும் அழைத்துள்ளார். இது எதுவுமே தெரியாத அன்பு அவரது அம்மாவிடம் சண்டையிட்டார். இதையடுத்து, நடப்பதை எல்லாம் ஆனந்தியிடம் சொல்லி புலம்புகிறார். அப்போது, ஆனந்தி விரைவில் அம்மாவை சமாதானம் செய்து விடலாம் எனக் கூறுகிறார்.

காதலை சொல்லும் மகேஷ்

தன் காதல் நிறைவேறுமா இல்லையா எனத் தெரியாமல் ஆனந்தி தவித்து வரும் நிலையில், ராத்திரி நேரத்தில் ஆனந்திக்கு போன் செய்த மகேஷ் பல நாட்களாக உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். அதற்கு இதுதான் சரியான நேரம் என பேச ஆரம்பித்தததும் ஆனந்திக்கு பயம் பற்றக் கொண்டது. இதுதொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.